மறுபடியும் பேசறதைப் பார்த்தேன்... "கட்" பண்ணிருவேன்... ஆபாச ஆர்.கே.பச்சோரி!
டெல்லி: என்னைத் தவிர வேறு எந்த ஆணிடமும் பேசக் கூடாது காதலிக்கவும் கூடாது. மீறி செய்தால், அவனுக்கு "கட்" செய்து விடுவேன் என்று தன்னை ஆர்.கே.பச்சோரி மிரட்டியதாக அவரால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் கூறியுள்ளார்.
ஆர்.கே.பச்சோரி, தேரி எனப்படும் தி எனர்ஜி அன்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட்டின் இயக்குநர் ஜெனரலாக இருந்தபோது அவர் தனக்கு பாலயில் தொந்தரவுகள் கொடுத்தார் என்று கூறி தேரியின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் புகார் கூறியுள்ளார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் எப்படியெல்லாம் தன்னிடம் பச்சோரி நடந்து கொண்டார் என்பதை தற்போது அப்பெண் ஊழியர் விவரித்துள்ளார்.
இதுதொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் அப்பெண் பச்சோரியின் குணம் எப்படி இருந்தது என்பதை அப்பெண் விவரித்துள்ளார். அவர் கூறுகையில், 2014ம் ஆண்டு மெக்சிகோவில் உள்ள லாஸ் கேபோஸ் என்ற இடத்தில் நடந்த மாநாட்டுக்குப் புறப்பட்டோம். அப்போது விமானத்தில் சக ஆண் ஊழியரிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன்.
அதைப் பார்த்த பச்சோரி என்னை அழைத்து உனக்கு யாராவது பாய் பிரண்ட் இருந்தால் உடனே மறந்து விடு. மறுபடியும் பார்த்தேன், அவனுக்கு "கட்" (castrate) செய்து விடுவேன் என்று கோபத்துடன் கூறவே நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன்.
2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் என்னை கட்டாயப்படுத்தி முத்தமிட்டார். 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிட்டர்ன் டு அல்மோரா என்ற நூலை என்னிடம் கொடுத்தப் படிக்கச் சொன்னார். நான் மறுத்து விட்டேன். அது ஆபாச வார்த்தைகள் நிரம்பிய நூலாகும்.
தேரியில் வேலை பார்க்கும் பல பெண் ஊழியர்களிடம் பேசுகையில் அவர்களை என் கண் முன்பாகவே ஆபாசமாக வர்ணிப்பார் என்று கூறியுள்ளார் இப்பெண்.
இவர்தான் பச்சோரி மீது முதலில் பாலியல் புகார் கூறியவர். சமீபத்தில் இன்னொரு பெண்ணும் புகார் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
முதல் பெண்ணின் புகாரைத் தொடர்ந்து தேரி பதவியிலிருந்து நீக்கப்பட்டார் பச்சோரி. சமீபத்தில்தான் அவர் மீண்டும் தேரி பதவிக்கு திரும்பி வந்தார். இந்த நிலையில் 2வது பெண்ணின் புகார் வரவே அவர் தற்போது காலவரையற்ற விடுமுறையில் போய் விட்டார்.












Click it and Unblock the Notifications