கள்ளக் காதல் கேட்குதா.. கணவனை தோளில் தூக்கி ஊரை சுற்று.. பெண்ணுக்கு தண்டனை கொடுத்த ஊர் மக்கள்
போபால்: மத்திய பிரதேச மாநிலம் திவாஸ் மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்ணின் கழுத்தில் செருப்பு மாலை அணிந்து, ஆடைகளை கிழித்து பெல்ட்டால் கொடூரமாக தாக்கி கணவரை தோளில் சுமந்து கிராமத்தை சுற்றி வரச்செய்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் திவாஸ் மாவட்டம் பழங்குடி கிராமத்தில் வசிப்பவர் 35 வயது பெண். இவருக்கும் இன்னொருவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதையடுத்து தம்பதி தங்களின் 3 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வந்தனர்.

கள்ளக்காதலனுடன் ஓட்டம்
இந்நிலையில் தான் சமீபத்தில் அதே கிராமத்தை சேர்ந்த இன்னொரு நபருடன், இந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து அந்த பெண் தனது கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் சொல்லாமல் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வெளியேறி தனியே வசிக்க தொடங்கினார்.

கள்ளக்காதலன் வீட்டில்...
இது அவரது கணவரின் குடும்பத்துக்கு தெரியவில்லை. இதனால் அந்த பெண் மாயமானதாக கணவரின் குடும்பத்தினரால் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் தான் அந்த பெண் அதேகிராமத்தில் உள்ள கள்ளக்காதலன் வீட்டில் இருப்பதை கிராமத்தினர் அறிந்தனர். இதுபற்றி உடனடியாக அந்த பெண்ணின் கணவரின் குடும்பத்துக்கு தகவல் கிடைத்தது.

பெண்ணுக்கு கொடுமை
இதையடுத்து அங்கு சென்ற கணவரின் குடும்பத்தினர் அவரை கிராமத்தினர் முன்பு சரமாரியாக தாக்கினர். மேலும் ஆடைகளை கிழித்து மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதோடு தரையில் தடுமாறி விழுந்த அந்த பெண்ணை அவர்கள் தரதரவென இழுத்து சென்றனர். அதோடு அவரது கணவரை தோளில் சுமக்கும்படி கட்டாயப்படுத்தி கிராமத்தை சுற்றி வர செய்தனர். அப்போது அவர் மீது பெல்ட்டால் கொடூரமாக தாக்கினர். மேலும் அந்த பெண்ணுக்கும் அவரது கள்ளக்காதலனுக்கும் செருப்பு மாலை அணிவித்து தொடர்ந்து தாக்கி கொடுமைப்படுத்தினர்.

கணவர் உள்பட 12 பேர் மீது வழக்கு
இதனை பலர் தங்களின் செல்போனில் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டனர். இதற்கிடையே சம்பவம் குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் மீட்டனர். மேலும் அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த பெண்ணின் கணவர் உள்பட 12 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 354ஏ (பாலியல் தொல்லை) உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனால் அந்த பெண்ணின் கணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications