ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு காரணம் என்ன.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கொடுத்த விளக்கம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:சட்ட விரோத பொருளாதாரத்தை முடக்குவதே ரூபாய் நோட்டு அறிவிப்பின் நோக்கம் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம் முன் வைத்துள்ளது.
புழக்கத்திலிருந்த அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு செல்லுபடியாகாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பொது நல வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், அதுகுறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

Illegal parallel economy unearthed post demonetisation- Centre tells SC

இதையேற்று மத்திய அரசு இன்று தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள்:

*ரூபாய் நோட்டு அறிவிப்பிற்கு காரணம், சட்ட விரோதமாக நடைபெறும், பொருளாதாரத்தை தடுப்பதுதான்.

ரொக்கப் பணத்தை கொண்டு நடைபெறும் பரிவர்த்தனைகளை குறைப்பது இந்த அறிவிப்பின் நோக்கங்களில் ஒன்று.

கள்ள நோட்டு புழக்கத்தை தடுத்து, தீவிரவாத குழுக்களுக்கு நிதி செல்லாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.

*கடந்த ஏழு வருடங்களாக குவிக்கப்பட்ட கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வரும் முயற்சி.

*ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பிறகு மக்கள் துன்பப்படுவதை தவிர்க்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

*புதிய ரூபாய் தாள்களை வினியோகம் செய்யும் வகையில் ஏடிஎம் மிஷின்களை மாற்றியமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

*மக்கள் படும் கஷ்டங்களை குறைக்க முடிந்த அளவுக்கு முயற்சிகள் தொடர்கிறது.

இவ்வாறு பிரமாணப்பத்திரத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+