2000 ரூபாய் நோட்டை வெளியிட்டதே முதலில் சட்டவிரோதம்.. சாட்டையை சுழற்றும் காங்.
ரூபாய் நோட்டு ஒழிப்பு அறிவிப்பும், 2000 ரூபாய் நோட்டு வெளியீடும் சட்டவிரோதமான செயல் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லி: ரூ. 2000 நோட்டு வெளியிட்டதில் சட்டத்தை மத்திய அரசு பின்பற்றவில்லை. இந்த ரூபாய் நோட்டை வெளியிட்டதே முதலில் சட்டவிரோதமாகும் என்று காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.
இந்த விவகாரத்தை சும்மா விடப் போவதில்லை என்று கூறியுள்ள காங்கிரஸ் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இந்த விவகாரத்தை எழுப்பப் போவதாகவும் எச்சரித்துள்ளது.
நாட்டை மிகப் பெரிய நிதிக் குழப்பத்தில் பிரதமர் மோடி தள்ளி விட்டதாக கூறியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் அனந்த் சர்மா, ரிசர்வ் வங்கி சட்டத்தை மீறும் வகையில் மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

சட்டவிரோத செயல்
இதுகுறித்து அனந்த் சர்மா கூறுகையில் ரிசர்வ் வங்கியின் சட்டத்தை இதில் மத்திய அரசு பின்பற்றவில்லை. சட்டவிரோதமான முறையில் 2000 ரூபாய் நோட்டை அது வெளியிட்டுள்ளது.

மை வைப்பது கொடுமை
அதேபோல ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிக்கு வருவோருக்கு விரலில் மை வைப்பதும் அராஜகமான நடவடிக்கை. கொடுமையானது. அத்தனை கட்சிகளுடனும் இணைந்து இந்த விவகாரத்தை காங்கிரஸ் பெரிதாக்கும். மக்களைத் திரட்டிப் போராடுவோம்.

திசை திருப்புகிறார் மோடி
பல முக்கியப் பிரச்சினைகளிலிருந்து மொத்தமாக மக்களைத் திசை திருப்ப முயல்கிறார் மோடி. மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறார். கறுப்புப் பண மீட்பு, தேசபக்தி என்ற பெயரில் மக்களை சிரமப்படுத்துகிறார்.

பிரதமரே பொறுப்பு
நாடு பெரும் நிதிச் சிக்கலில் சிக்கித் தவிக்க பிரதமரே முழுக் காரணம் ஆவார். அவரே இதற்குப் பொறுப்பு. அரசியல் சாசனச் சட்டம் 360வது பிரிவை அமல்படுத்தாமலேயே நெருக்கடி நிலையை மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது.

சட்டப்படி தவறு
நவம்பர் 8ம் தேதி பிரதமர் வெளியிட்ட அறிவிப்பே முதலில் சட்டப்படி தவறாகும். எந்த வகையிலும் சட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கை இல்லை இது என்றார் அனந்த் சர்மா.
-
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
கடைசி பஸ் பிடிக்க போற மாதிரி அவசரப்பட்டது எல்லாம்.. இதுக்குத்தானா? வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
தீராத "கேரளா" தலைவலி.. வென்றாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது! என்ன செய்ய போகிறார் ராகுல்? -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications