For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பல கோடி ரூபாய் மதிப்பில் கை கடிகாரங்கள்.. மலைக்க வைக்கும் நீரவ் மோடி சென்டிமென்ட்!

நீரவ் மோடியின் பல்வேறு சொத்துக்கள் தற்போது சிபிஐ மூலம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பலனடைந்த நீரவ் மோடி!- வீடியோ

    டெல்லி: நீரவ் மோடியின் பல்வேறு சொத்துக்கள் தற்போது சிபிஐ மூலம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. அவர் வீட்டில் இருந்து கைக்கடிகாரம் மட்டும் நூற்றுக்கணக்கில் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.

    இதில் பல்வேறு இடங்களில் பல்வேறு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. நீரவ் மோடியை மத்திய அரசு தீவிரமாக தேடி வருகிறது.

    அலமாரிகள்

    அலமாரிகள்

    அவர் வீடு ஒன்றில் இருந்து தற்போது 176 அலமாரிகள் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. இதில் மொத்தம் 60 பிளாஸ்டிக் பெட்டிகள் இருந்துள்ளது. ஏற்கனவே இதில் இருந்து 30 கோடி மதிப்புள்ள பொருட்கள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    என்ன

    என்ன

    இதில் முழுக்க முழுக்க கைக்கடிகாரங்கள் இருந்துள்ளது. எல்லாம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட கடிகாரம் ஆகும். உலகில் இருக்கும் எல்லா நிறுவன விலையுயர்ந்த கைக்கடிகாரமும் இதில் இருந்துள்ளது.

    செண்டிமெண்ட்

    செண்டிமெண்ட்

    நீரவ் மோடிக்கு வித்தியாசமான செண்டிமெண்ட் ஒன்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு முறையும் புதிய கைக்கடிகாரம் கட்டும் பழக்கத்தை வைத்துள்ளார். புதிய ஒப்பந்தங்கள் போடும்போது விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் மட்டுமே அணிந்து சென்று இருக்கிறார்.

    இதுவரை எவ்வளவு

    இதுவரை எவ்வளவு

    இதுவரை நீரவ் மோடியின் நிறுவனங்கள், வீடுகள் உட்பட 17 இடங்களில் இருந்து ரூ.5,100 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கம், வைரம் உள்ளிட்ட பொருட்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இவரிடம் 23 அசையா சொத்துக்கள் பல்வேறு இடங்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

    English summary
    CBI received two complaints from Punjab National bank against billionaire jewellery designer Nirav Modi and a jewellery company regarding fraudulent transactions worth over Rs 10,000 crore. However, Investigation agencies are clueless about the whereabouts of Nirav Modi, the prime accused in the case. Nirav Modi has left India. Rs 5,100 crore seized from Nirav Modi assets. No one is co-operating with CBI in Nirav Modi probe
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X