மக்கள் சலிப்பு, வெறுப்பில் உள்ளனர்.. ம்ஹூம்... மறுபடி, பாஜக ஆட்சி அமைய வாய்ப்பே இல்லை: மம்தா பானர்ஜி
கொல்கத்தா: ‛‛2024 மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெறாது. இதன்மூலம் மீண்டும் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை'' என ஆணித்தனமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இவர் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து 3வது முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார்.
தற்போது 2024ம் ஆண்டு நடக்கும் மக்களவை தேர்தலில் மம்தா பானர்ஜி கவனம் செலுத்தி வருகிறது. தேசிய அளவில் 3வது அணியை அமைக்க அவர் முயன்று வருகிறார்.

3வது அணிக்கு முயற்சி
அதாவது மத்தியில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும், அவர் பிரதமர் பதவி மீது மம்தா பானர்ஜி கண்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக மம்தா தனது மாநிலத்தில் தேர்தல் பணியை துவக்கி உள்ளார். இதற்காக தனியாக இணையதளம் பக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மம்தா பானர்ஜி பேச்சு
மேலும் மம்தா பானர்ஜி தனது கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று புருலியா மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பங்கேற்று பேசினார். அப்போது அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். இதுபற்றி அவர் கூறியதாவது:

பணமதிப்பிழப்பில் ஊழல்
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி தவறான பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்தியது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது நாட்டின் மிகப்பெரிய ஊழலாகும். இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை பாஜக முற்றிலுமாக சீரழித்துவிட்டது.

2024ல் பாஜகவுக்கு வெற்றியில்லை
பாஜக எதிர்க்கட்சிகளை அடக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் பாஜக எதிர்க்கட்சிகளை கட்டுப்படுத்துகிறது. மொத்தத்தில் பாஜக அரசு கலப்படம் நிறைந்த அரசாக உள்ளதால் பாஜக மீது மக்கள் சலிப்பு, வெறுப்பு அடைந்துள்ளனர். இதனால் 2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெறாது. இதன்மூலம் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை.












Click it and Unblock the Notifications