இந்திரா காந்திக்குப் பிறகு அமீரகம் செல்லும் இந்திய பிரதமர் மோடி
டெல்லி: இந்திரா காந்தியை அடுத்து ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு பயணமாக இன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். முதலில் அவர் அபுதாபிக்கு செல்கிறார். கடந்த 34 ஆண்டுகளில் அமீரகம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த 1981ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அபுதாபியில் உள்ள உலக புகழ்பெற்ற ஷேக் ஜயீத் மசூதிக்கு இன்று மோடி செல்கிறார். அந்த மசூதி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட மார்பிள் கற்களால் கட்டப்பட்டது.
இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது, வர்த்தகம், முதலீடு குறித்து மோடி இந்த பயணத்தில் கவனம் செலுத்த உள்ளார். அதன் பிறகு அவர் 28 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கும் முகாமிற்கு செல்கிறார். அங்கு அவர் இந்திய தொழிலாளர்களை சந்தித்து பேச உள்ளார்.
நாளை துபாய் செல்லும் மோடி அங்குள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications