குஜராத்தில் மாட்டு தோலை உரித்த தலித்துகள் மீது கொலை வெறி தாக்குதல்- பசு பாதுகாலர்கள் மீது வழக்கு
இறந்த மாட்டின் தோலை உரித்ததற்காக குஜராத் மாநிலத்தில் மீண்டும் தலித்துகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய பசு பாதுகாலர்கள் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற
அகமதாபாத்: குஜராத் மாநிலம் ஆன்ந்த் மாவட்டத்தில் இறந்த மாட்டின் தோலை உரித்ததற்காக தலித்துகள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்திய பசுப்பாதுகாவலர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்தில் கசோர் என்னும் கிராமத்தில் தலித்துகள் இறந்த மாட்டின் தோலை உரித்ததால் ஆத்திரமடைந்த பசு பாதுகாவலர்கள் சிலர் கடந்த சனிக்கிழமை இரவு அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

கசோர் கிராமத்தில் வசித்து வரும் ரோஹித் மற்றும் அவரது தாயார் மணிபென் ஆகிய இருவரையும் தான் அந்தக் கும்பல் தாக்கியுள்ளது. அதனால் பயந்து போன ரோஹித் கிராமத்தை விட்டு தப்பி ஓடி தலைமறைவானார்.
ரோஹித் மீண்டும் கிராமத்திற்கு வந்த போது, அந்த கும்பல் வீடு புகுந்து ரோஹித்தையும் அவரது தாயாரையும் தாக்கியுள்ளது. அதனையடுத்து அவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
போலீசார் தாக்குதல் நடத்திய ஐவர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட இரண்டு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், ஏழு பேரை தேடி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட ரோஹித் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
கடந்த ஜூலை 2016ஆம் ஆண்டு உனா என்ற இடத்தில் இதே போன்று இறந்த மாட்டின் தோலை உரித்ததற்காக பசு பாதுகாவலர்கள் சிலர் நான்கு பேரை கட்டி வைத்து நிர்வாணப்படுத்தி கடும் தாக்குதலை நடத்தினர் . அந்த தாக்குதலைக் கண்டித்து மாபெரும் எதிர்ப்புப் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications