குஜராத்தில் மாட்டு தோலை உரித்த தலித்துகள் மீது கொலை வெறி தாக்குதல்- பசு பாதுகாலர்கள் மீது வழக்கு
இறந்த மாட்டின் தோலை உரித்ததற்காக குஜராத் மாநிலத்தில் மீண்டும் தலித்துகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய பசு பாதுகாலர்கள் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற
அகமதாபாத்: குஜராத் மாநிலம் ஆன்ந்த் மாவட்டத்தில் இறந்த மாட்டின் தோலை உரித்ததற்காக தலித்துகள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்திய பசுப்பாதுகாவலர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்தில் கசோர் என்னும் கிராமத்தில் தலித்துகள் இறந்த மாட்டின் தோலை உரித்ததால் ஆத்திரமடைந்த பசு பாதுகாவலர்கள் சிலர் கடந்த சனிக்கிழமை இரவு அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

கசோர் கிராமத்தில் வசித்து வரும் ரோஹித் மற்றும் அவரது தாயார் மணிபென் ஆகிய இருவரையும் தான் அந்தக் கும்பல் தாக்கியுள்ளது. அதனால் பயந்து போன ரோஹித் கிராமத்தை விட்டு தப்பி ஓடி தலைமறைவானார்.
ரோஹித் மீண்டும் கிராமத்திற்கு வந்த போது, அந்த கும்பல் வீடு புகுந்து ரோஹித்தையும் அவரது தாயாரையும் தாக்கியுள்ளது. அதனையடுத்து அவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
போலீசார் தாக்குதல் நடத்திய ஐவர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட இரண்டு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், ஏழு பேரை தேடி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட ரோஹித் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
கடந்த ஜூலை 2016ஆம் ஆண்டு உனா என்ற இடத்தில் இதே போன்று இறந்த மாட்டின் தோலை உரித்ததற்காக பசு பாதுகாவலர்கள் சிலர் நான்கு பேரை கட்டி வைத்து நிர்வாணப்படுத்தி கடும் தாக்குதலை நடத்தினர் . அந்த தாக்குதலைக் கண்டித்து மாபெரும் எதிர்ப்புப் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications