ஹைதராபாத்தில் இரண்டு மாதங்களில் 26 பெற்றோர் ஜெயிலில் அடைப்பு... காரணம் என்ன தெரியுமா?
மைனர் குழந்தைகளை வாகனம் ஓட்டுவதற்கு அனுமதி அளித்ததாக, ஹைதராபாத்தில் இரண்டு மாதங்களில் 26 பெற்றோர் சிறையில் அடைப்பு.
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் கடந்த இரண்டு மாதங்களில் போலீசார் நடத்திய திடீர் சோதனைகளில், 26 பெற்றோர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். காரணம் என்ன தெரியுமா? அவர்களுடைய மைனர் மகன் அல்லது மகள் ஓட்டுவதற்கு டூவீலர் கொடுத்ததுதான்.
சாலை விபத்துகளை குறைக்கும் வகையில், 18 வயதுக்குட்பட்ட சிறுவன் அல்லது சிறுமி டூவிலர்களை ஓட்டி, போலீசில் சிக்கினால், அவர்களுடைய பெற்றோர்களை சிறையில் அடைக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் நாடு முழுவதுற்கும் பொருந்தும்.

ஹைதராபாத் போலீசார் இந்த சட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். காரணம், 2016ல் அங்கு மைனர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது என 11,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதே நேரத்தில், 2017ல் இது 14,000க்கும் அதிகமானது.
அதையடுத்து மைனர்கள் வாகனம் ஓட்டினால் வழக்கு பதிவு செய்வது, தண்டனை அளிப்பது ஹைதராபாத்தில் இந்தாண்டில் தீவிரபடுத்தப்பட்டது. பிப்ரவரியில் நடந்த அதிரடி போலீஸ் சோதனையில் 1079 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 60 மைனர்களின் பெற்றோர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
13, 14 வயது சிறுவர்கள், சிறுமிகள் கூட டூவிலரில் பறப்பது ஹைதராபாத்தில் ரொம்ப சகஜமாகிவிட்டது. அதனால், போலீஸ் நடவடிக்கை மேலும் தீவிரமானது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இவ்வாறு வாகனம் ஓட்டிய மைனர்கள் மீது 273 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில், 26 பெற்றோர் கம்பி எண்ண நேர்ந்துள்ளது.
பெற்றோர்களே உஷாராக இருங்க. வீட்டில் நீங்கள் கொடுக்கும் குடைச்சல்களுக்கு பழிவாங்குவதற்காக, உங்களுடைய மைனர் குழந்தைகள் டூவிலர்களை எடுத்தும் செல்லலாம். டூவிலர்களை வாங்கித் தருவதை, அதை ஓட்டுவதற்கு அனுமதிப்பதை நிறுத்தினால் பெற்றோர்களுக்கு நல்லது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications