கேரளாவிலும் 30 கிறிஸ்தவர்கள் மதமாற்றம்.. உதவி செய்ததாக கூறுகிறது வி.எச்.பி.
ஆலப்புழா/திருவனந்தபுரம்: நாடு முழுவதும் பல பகுதிகளில் விஸ்வ இந்து பரிஷத் பிற மதத்தினரை இந்து மதத்திற்கு மாற்றும் வேலையில் இறங்கியுள்ளது. இது சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் கேரளாவில் 30 கிறிஸ்தவர்கள் இந்துக்களாக மாற உதவி செய்ததாக வி.எச்.பி கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்தக கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆலப்புழாவைச் சேர்ந்த 8 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியதாக கூறப்படுகிறது. இந்த 30 பேரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமையன்று, கனிச்சன்னல்லூர் என்ற இடத்தில் உள்ள கோவிலில் வைத்து மதமாற்றம் புரிந்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து மாநில போலீஸ் துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு கூடுதல் டிஜிபி ஹேமச்சந்திரனுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இதுகுறித்து அவர் விசாரணை நடத்துவார். இதில் சட்ட மீறல் இருக்கிறதா என்பதை ஆராய்வார் என்றார்.
இதுதொடர்பாக உள்ளூர் வி.எச்.பி. தலைவர் பிரதாப் படிக்கல் கூறுகையில், அனைவரும் சொந்த விருப்பத்தின் பேரிலேயே மதம் மாறினர். நாங்கள் அதற்குத் தேவையான உதவிகளை மட்டுமே செய்து கொடுத்தோம். மேலும் 150 பேர் மதம் மாற விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கும் தேவையான உதவிகளை வி.எச்.பி. செய்யும். கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்றார் அவர்.
ஏற்கனவே ஆக்ராவில் 57 கிறிஸ்தவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர். குஜராத்தில் நேற்று பெரிய அளவிலான மதமாற்றம் நடைபெற்றது. இந்த நிலையில் கேரளாவிலும் அது பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications