லக்னோவில் 58,844 பேருக்கு ஒரு கழிப்பறை... தகவல் அறியும் சட்டத்தால் வெளியான அதிர்ச்சித் தகவல்!
லக்னோ: உத்திரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவில் 58,844 பேருக்கு ஒரு கழிப்பறை மட்டுமே புழக்கத்தில் உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் உத்திரப்பிரதேசத்தில் இரவு நேரத்தில் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற இரண்டு சகோதரிகள் மர்மநபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு கொலை செய்யப் பட்டனர். இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை மிகுந்த மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் சரிவர கழிப்பறை வசதி இல்லாததே இத்தகைய பாலியல் குற்றங்களுக்கு முக்கியக் காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், உத்திரப்பிரதேசத்தின் தலைநகரில் 58,844 பேருக்கு ஒன்று என்ற விகிதாச்சாரத்திலேயே கழிப்பறை வசதி உள்ளதாக அம்பலமாகியுள்ளது.

மிகப் பெரிய மாநிலம்...
பரப்பளவிலும், மக்கட்தொகையிலும் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் உத்திரபிரதேசம் தான். இதன் தலைநகரான லக்னோவின் மக்கள் தொகை 3 கோடியைத் தாண்டும் எனக் கூறப்படுகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்...
இந்நிலையில், சமூக ஆர்வலர் ஊர்வசி சர்மா லக்னோ முனிசிபல் கார்பரேஷனில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், அங்குள்ள கழிப்பறைகளின் எண்ணைக்கையை கேட்டு விண்ணப்பித்தார்.

பெண்களுக்கு...
அதில், கிடைத்த தகவலின் படி லக்னோவில் பெண்களுக்கு என பொதுக்கழிப்பிட வசதி கிடையாது என தெரிய வந்துள்ளது.

58,844 பேருக்கு ஒன்று...
மேலும், அங்கு சுமார் 58 844 பேருக்கு ஒரு கழிப்பறை தான் உள்ளது என அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் உண்மை நிலவரம் அம்பலமாகியுள்ளது.

இதுவே காரணம்...
இது தொடர்பாக சர்மா கூறுகையில், ‘நான் ஒவ்வொரு நாளும் நடக்கும் குற்றங்களை பார்த்து அதிர்ச்சி அடைகிறேன். பொது கழிப்பறைகள் இல்லாததால் இங்கு குற்றங்கள் அதிகரித்து கொண்டே போகிறது.இந்த சூழ்நிலை மாநிலத்தின் தலைநகரிலேயே நிலவினால் மாநிலத்தின் கிராம பகுதிகளை எண்ணிப்பாருங்கள்' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications