நடைப் பயிற்சி... மும்பையை பின்னுக்குத் தள்ளிய டெல்லி!
டெல்லி: மும்பை நகர மக்களை விட அதிக எண்ணிக்கையில் டெல்லியில் மக்கள் நடைப் பயிற்சி மேற்கொள்வதாக சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
மாக்ஸ் பூபா என்ற நிறுவனம் டெல்லி மற்றும் மும்பையில் நடைபயிற்சி செய்வோர் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள காரணம் என்ன?, அவர்கள் எவ்வளவு நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள்?, நடைப்பயிற்சி செய்யும் போது அவர்கள் வேறு என்ன செய்கிறார்கள் போன்ற கேள்விகளுக்கு விடை காணும் விதமாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதற்காக டெல்லி மற்றும் மும்பையில் தலா 1000 மக்களிடம் மாக்ஸ் பூபா சார்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் மும்பையை விட டெல்லியில் அதிக எண்ணிக்கையில் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்வது தெரிய வந்துள்ளது.
இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் சில...

ரொம்ப சந்தோஷம்...
டெல்லியில் 56% மக்கள் ஒழுங்காக நடைப்பயிற்சி செய்ய துவங்கிய பின் தாங்கள் மகிழ்ச்சியாக உணர்வதாக தெரிவித்துள்ளனர். மும்பையில் 46% மக்கள் மட்டும் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
நடக்கவே விருப்பம்...
நடைப்பயிற்சி மேற்கொள்ள ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வாகனத்தில் செல்வதை விட அருகே உள்ள குறுகிய தூரத்தில் நடக்கவே விருப்பம் என டெல்லியில் 45% மக்களும், மும்பையில் 32% மக்களும் கூறியுள்ளனர்.
சரியான நேரம்...
தவறாமல் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக என அலுவலகத்திலிருந்து சரியான நேரத்தில் திரும்புவதாக 36% டெல்லி மக்களும், மும்பையில் 26% மக்களும் இந்த கணக்கெடுப்பில் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் நேரம்...
ஒரு வாரத்திற்கு மும்பை மக்களின் சராசரி நடைப்பயிற்சி நேரம் 48 நிமிடங்களாக உள்ள நிலையில், டெல்லி மக்கள் வாரத்திற்கு சராசரியாக 35 நிமிடங்கள் நடக்கின்றனர்.
குடும்பமா... நண்பர்களா...
56% டெல்லி மக்கள் குடும்பத்தினரோடு நடைப்பயிற்சி செல்ல விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், 50 சதவீத மும்பை மக்கள் நண்பர்களோடு செல்வதை விரும்புகின்றனர்.
நேர்மறை மாற்றத்திற்கு உதவும்...
இந்தக் கணக்கெடுப்பு குறித்து மாக்ஸ் பூபா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மனசிஜி மிஸ்ரா கூறுகையில், ‘டெல்லி, மும்பை ஆகிய இரு மாநகர மக்களும் மன உளைச்சல், நாள்பட்ட நோய் போன்றவற்றால் அவதிப்படுகிறார்கள். இவர்களின் வாழ்க்கை முறையின் நேர்மறை மாற்றத்திற்கு உதவிபுரியும் நடைப்பயிற்சி பழக்கம், மக்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்த உதவுகிறது' எனத் தெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications