ரேஷன் அலுவலக பெண் அதிகாரி முன் “நிர்வாண தரிசனம்” - முதியவரின் அநாகரீக செயலால் அதிர்ச்சி!
Subscribe to Oneindia Tamil
பல்ஹார்: மகாராஷ்டிர மாநிலம் பல்ஹாரில் முதியவர் ஒருவர் ஆடையே இல்லாமல் அரசாங்க அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மகராஷ்டிரா, பல்ஹார் மாவட்டம், வாசை என்னும் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் சட்டை, பேண்ட், உள்ளாடைகள் என அனைத்தையும் களைந்து விட்டு ரேஷன் அலுவலக பெண் அதிகாரி முன்னர் நின்றுள்ளார் என்று காவல் அதிகாரி பாட்டில் தெரிவித்துள்ளார்.
முன்னாபாய் என்கின்ற படத்தில் இதே போன்று ஒருவர் லஞ்சம் கேட்ட அதிகாரியின் முன்னர் ஆடைகளைக் களைந்துவிட்டு நிற்பார். அதே போன்றே இந்த முதியவரும் செயல்பட்டுள்ளார்.
இச்சம்பவம் அவ்வலுகத்தில் உள்ள ஊழியர்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக இது போன்ற செயலில் அந்த முதியவர் ஈடுபட்டார் என்று அவரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications