For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆண் குழந்தை பிறக்க புத்ரஜீவக் மருந்து: கூவி கூவி விற்கும் பாபா ராம்தேவ் மெடிக்கல்ஸ்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: யோகா குரு பாபா ராம்தேவின் மருந்துக்கடைகளில் கிடைக்கும் திவ்ய புத்ரஜீவக் விதை என்ற மருந்தை சாப்பிட்டால் ஆண் குழந்தை பிறக்கும் என்று கூறியே விற்பனை செய்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

யோகா குரு பாபா ராம்தேவ் மருந்துகள் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். இதற்காக அவர் பதாஞ்சலி என்ற பெயரில் பல்வேறு இடங்களில் மருந்துக் கடைகள் நடத்தி வருகிறார். அந்த கடைகளில் திவ்ய புத்ரஜீவக் விதை என்ற மருந்து விற்கப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த மருந்தை சாப்பிட்டால் குழந்தை பிறக்குமாம். ஒரு பாக்கெட் மருந்தின் விலை ரூ.35 ஆகும்.

In Name of Ramdev's Infertility Cure, the Promise of a Boy Child?

இந்நிலையில் இந்த புத்ரஜீவக் மருந்தை சாப்பிட்டால் நிச்சயம் ஆண் குழந்தை பிறக்கும் என்று கூறி விற்பனை செய்கிறார்களாம். இதை நம்பி பலர் அந்த மருந்தை போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் செல்கிறார்களாம்.

இது குறித்து ராம்தேவின் மருத்துக்கடையில் வேலை செய்யும் டாக்டர் ஷியாம் சுந்தர் கூறுகையில்,

ஆண் குழந்தை உள்ளவர்கள் எங்களிடம் மருந்து வாங்கி சாப்பிட்டு தான் பிறந்தது என்று பிறரிடம் கூறுங்கள். உங்களுக்கு ஆண் குழந்தை இல்லை எனில் புத்ரஜீவக் மருந்தை சாப்பிட்டால் புத்ர பாக்கியம் கிடைக்கும் என்று ஸ்வாமிஜி(ராம்தேவ்) தெரிவித்துள்ளார் என்றார்.

ஹரியானாவில் தான் தம்பதிகள் அதிக அளவில் இந்க மருந்தை வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.

English summary
The medical stores owned by Yoga guru Baba Ramdev are selling a medicine that can guarantee the birth of a boy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X