ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர விரும்பி, பின் மனம் மாறி இந்தியா திரும்பிய 18 வயது பெண்!
ஹைதராபாத்: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பால் ஈர்ப்பு ஏற்பட்டு அந்த அமைப்பில் சேர நினைத்து பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்டு இந்தியா திரும்பியுள்ளார் 18 வயதான ஹைதராபாத் பெண்.
இந்தப் பெண் கத்தார் நாட்டின் தோஹா நகரில் வசித்து வந்தார். இவருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக இவர் அந்த அமைப்பின் மீது ஆர்வம் கொண்டார். இதையடுத்து அதில் சேர முடிவு செய்தார். அவருடன் அவருக்குப் பக்கத்து வீ்ட்டில் வசித்து வந்த ஒரு பெண்ணும் சேர முடிவெடுத்தார்.

இந்த நிலையில் ஹைதராபாத் பெண்ணின் மனதில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தனது முடிவை கைவிட்டார். மேலும் தாயகம் திரும்பி விட முடிவு செய்து ஹைதராபாத்துக்குப் புறப்பட்டு விட்டார். தற்போது அவர் தனது பெற்றோருடன் சேர்துள்ளார் என்று ஹைதராபாத் மாநகர காவல்துறை ஆணையர் மகேந்திர ரெட்டி கூறியுள்ளார்.
தானாகவே மனம் திருந்தி அந்தப் பெண் வந்துள்ளதாகவும், போலீஸ் தரப்பில் எந்த கவுன்சிலிங்கும் கொடுக்கப்படவில்லை என்றும் மகேந்திர ரெட்டி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 2 மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஐஎஸ் அமைப்பில் சேர வேண்டும் என்று தோன்றியுள்ளது. ஆனால் அவரே பின்னர் மனம் மாறியுள்ளார். இதையடுத்து தாயகம் திரும்ப முடிவெடுத்தார். இதையடுத்து போலீஸ் தரப்பில் அவர் நாடு திரும்ப உதவி செய்யப்பட்டது. தற்போது அவர் திரும்பி வந்து விட்டார். பெற்றோருடன் இணைந்துள்ளார் என்றார் ரெட்டி.
அவர் தீவிரவாத அமைப்பில் சேர்வில்லை என்பதாலும், தீவிரவாதிகள் யாருடனும் தொடர்பு வைத்திருக்கவில்லை என்பதாலும் அவர் மீது வழக்குப் போடவில்லை என்றும் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை என்றும் போலீஸார் கூறியுள்ளனர்.
இருப்பினும் தங்களது மகளுக்கு கவுன்சிலிங் தருமாறு பெற்றோர் தரப்பில் காவல்துறையை அணுகியுள்ளதாக ரெட்டி கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications