பெண் குழந்தைகளுக்கு ”கல்வி” என்னும் நம்பிக்கை அளிக்கும் ராஜஸ்தான் ஆண்கள்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பள்ளிக்கு செல்லாமல் அல்லது பாதியில் படிப்பை கைவிட்ட பெண் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து அவர்களின் கல்விக்காக ஆண்கள் குரல் கொடுக்கும் நிகழ்வு பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.
அம்மாநிலத்தில் பெண் கல்வியை வலியுறுத்தும் தொண்டு நிறுவனம் ஒன்றில் தன்னார்வ தொண்டர்களாக பணியாற்றுபவர்களில் 4500 பேர் இளைஞர்கள் ஆவர்.
கிராமங்களுக்கு சென்று பள்ளி செல்லா பெண் குழந்தைகளை கண்டறிவதற்காக இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

பெண்குழந்தைகளுக்கு உதவி:
இந்த அமைப்பு இதுவரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து கல்வி கற்க உதவி செய்துள்ளது. இந்த சமூக பணிக்காக 1.25 மில்லியன் டாலரை பரிசாக இந்த அமைப்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
5 ஆம் வகுப்பை தாண்டுவதில்லை:
பெண் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாநிலமான ராஜஸ்தானில் 40 சதவீதம் பெண் குழந்தைகள் 5 ஆம் வகுப்பை தாண்டுவதற்கு முன்பாகவே பள்ளியில் இருந்து நிறுத்தப்படுகிறார்கள்.
பொருளாதார தன்னிறைவு:
பெரும்பாலும் அவர்களின் பெற்றோர்களாலேயே வீட்டு வேலை செய்வதற்கும் கால்நடைகளை பார்த்துக்கொள்வதற்காகவும் இவ்வாறு செய்யப்படுகிறார்கள்.
குழந்தைத் திருமணம் தவிர்ப்பு:
ஆனால் பெண்கள் கல்வி கற்பதன் மூலம் அவர்கள் பொருளாதார தன்னிறைவு பெறுகிறார்கள். மேலும் குழந்தை திருமணங்கள் தவிர்க்கப்படுவதுடன் சரியான வயதில் திருமணம் செய்து கொள்வதால் ஆரோக்கியமான குழந்தைகளும் பிறக்கும்.
நம்பிக்கை விதைக்கும் ஆண்கள்:
இது பற்றி அந்த அமைப்பின் தலைவர் சபீனா ஹுசைன் கூறுகையில் "பெண் கல்விக்கு தடையாக இருக்கும் ஆண் சமூகத்தையே பெண் கல்விக்கான பணிகளில் ஈடுபடுத்துவதை முக்கியமானதாக கருதுகிறேன். மேலும் நான் சந்தித்த எந்த பெண்ணும் பள்ளிக்கு வர மறுக்கவில்லை என்பது நம்பிக்கை தரும் விஷயமாகும்" என தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications