திரிபுராவில் இடதுசாரி, பாஜக கூட்டணி நடுவே கடும் போட்டி
திரிபுராவில் இடதுசாரி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மாணிக் சர்க்கார் 5வது முறையாக அரியணையில் அமருவாரா?
அகர்தலா: திரிபுராவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் இடதுசாரி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
திரிபுராவில் கடந்த 18-ஆம் தேதி 59 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் மாநிலத்தை 25 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் இடதுசாரிகளும், பாஜக கூட்டணியும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி இடதுசாரி- 24 இடங்களிலும் , பாஜக 26 இடங்களிலும் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் தலா ஒரு இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இரு கட்சிகளும் மாறி, மாறி முன்னிலை பெற்றுவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின் படி திரிபுராவில் இடதுசாரிகள்தான் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனினும் அவ்வப்போது முன்னிலை நிலவரங்கள் மாறி வருவது சற்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications