என்ன இது? கோபத்தின் உச்சிக்கே போன விராட் கோலி.. அந்த ஒரு பார்வை.. மேட்சில் நடந்த பரபர சம்பவம்
அகமதாபாத் பிட்ச் ஸ்பின் பிட்ச் என்றாலும் டெல்லி பிட்ச் அளவிற்கு ஸ்பின் ஆகவில்லை.
அகமதாபாத் : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி திடீரென கோபம் அடைந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஏற்கனவே இந்தியா வென்றுவிட்டது. இதன் மூலம் பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்தியா தக்க வைத்து உள்ளது.
மூன்றாவது டெஸ்ட் இந்தூரில் நடந்தது. இதில் மோசமான ஆட்டம் காரணமாக.. முக்கியமாக பேட்டிங் சொதப்பியதால் இந்திய அணி தோல்வி அடைந்தது.

என்ன நடந்தது?
பிட்ச் ஸ்பின் பிட்ச் என்றாலும் டெல்லி பிட்ச் அளவிற்கு ஸ்பின் ஆகவில்லை. அதனால் இந்திய அணியின் ஸ்பின் பவுலர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் கொஞ்சம் எளிதாகவே எதிர்கொண்டனர். இதனால் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் எடுத்தது. குவாஜா மட்டும் 180 ரன்கள் எடுத்தார். கேமரூன் கிரீன் 114 ரன்கள் எடுத்தார். அஸ்வின் இதில் 6 விக்கெட் எடுத்து அசத்தினார். இதையடுத்து இறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

கோலி
புஜாரா 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஆனால் இன்னொரு பக்கம் சுப்மான் கில் நிதானமாக ஆடினார். இவர் 235 பந்துகளில் 128 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 12 பவுண்டரி அடக்கம். அதேபோல் 1 சிக்ஸ் அடித்துள்ளார். மிக நேர்த்தியான டெஸ்ட் வீரராக அவரின் ஆட்டம் இவரின் இருந்தது. அதோடு பால்ஸ் ஷாட் மிக மிக குறைவாக இருந்தது. இந்த வருடத்தில் இதோடு கில் அடிக்கும் 5வது சர்வதேச சதம் இது. இன்னொரு பக்கம் நிதானமாக ஆடிய கோலி சதம் அடித்தார்.

ஆட்டம்
இது அவரின் 28வது டெஸ்ட் போட்டியாகும். அதேபோல் 75வது சர்வதேச சதம் ஆகும். இன்று மிகவும் நிதானமாக ஆடி 256 பந்துகளில் 110 ரன்கள் எடுத்துள்ளார். அவர் மிக மிக நிதானமாக ஆடிய விதம் கவனிக்கப்பட்டது. இதனால் இந்திய அணி 419-5 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது இந்தியா 61 ரன்கள் பின்னடைவை சந்தித்து உள்ளது. தற்போது இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் டிராவை நோக்கி செல்வது போல் உள்ளது. இன்று நான்காவது நாள் ஆட்டம். இதில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் முதல் இன்னிங்சில் ஆடி வருகிறது. இதனால் மேட்ச் டிரா ஆகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன

கோபம்
இன்றைய மேட்சில் கோலி திடீரென ஸ்ரீகர் பரத் மீது கோபம் அடைந்தார். 67 ரன்கள் இருந்த நிலையில் கோலி அடித்துவிட்டு ஓட முயன்றார். அப்போது ஸ்ரீகர் பரத் தான் ரன் ஓட அழைத்தார். ஆனால் பாதி கிரீஸ் தாண்டிய பின் ஸ்ரீகர் பரத் ரன் ஓடாமல் பின்னாடி சென்றார். இதனால் பாதி வழியில் கோலி திரும்பி சென்றார். அதிர்ஷ்டவசமாக அவர் அவுட் ஆகாமல் தப்பித்தார். இதையடுத்து கோலி அப்படியே திரும்பி ஸ்ரீகர் பரத்தை கோபமாக பார்த்தார். ஏன் இப்படி பின்வாங்கினாய் என்பது போல கோபமாக பரத்தை பார்த்து முறைத்தார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications