கறுப்பு பணத்தை தடுக்க ரூ. 4500 பணம் மாற்றுபவர்கள் விரலில் அழியாத மை- சக்தி காந்த தாஸ்
வங்கியில் ஒரே நபர் மீண்டும் மீண்டும் பணம் மாற்றுவதை தடுக்கும் வகையில் தேர்தலைப் போல விரலில் அழியாத மை வைக்க முடிவு செய்துள்ளதாக பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.
டெல்லி: ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு 1 வாரமாகியும் அவற்றை வங்கிகளில் மாற்ற முடியாததால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வங்கிகளிலும் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்காக வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சரியாக இயங்காத ஏடிஎம் மையங்களை அவர்கள் அடித்து நொறுக்கினர். பல இடங்களில் போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன. பெரும்பாலான ஏடிஎம் மைங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. கடந்த 1 வார காலமாக பணம் எடுக்க முடியாமல் கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நடமாடும் ஏடிஎம் மையங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடமாடும் ஏடிஎம் மையங்களிலும் கூட்டத்திற்கு குறையில்லை. பணப் புழக்கம் இல்லாததால் அனைத்து தரப்பினருமே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் பல்வேறு நபர்கள் மூலம் பணத்தை மாற்ற முயற்சி செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. வங்கிக்கணக்குகளில் பழைய ரூபாய் நோட்டுக்களை செலுத்தாமல் அதனை மாற்றி வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் வங்கிக்கு வந்து ரூ. 4500 பணத்தை மாற்றுபவர்கள் கைகளில் அழியாத மை வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இன்று முதல் இது நகரங்களில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.
ஜன்தன் கணக்குகளில் குறிப்பிட்ட அளவே டெபாசிட் செலுத்த முடியும். 49000 ரூபாய் ஜன்தன் கணக்குகளில் பணத்தை செலுத்த முடியும். அதையும் கண்காணிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வங்கிகளில் போதிய அளவு பணம் உள்ளது. எந்த வித வதந்திகளையும் மக்கள் நம்ப வேண்டாம் என்றும் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.
மத்திய அரசின் அறிவிப்பு எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்று தெரியவில்லை என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications