54 ஆப்பிரிக்க நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கும் உச்சிமாநாடு.. டெல்லியில் தொடங்கியது!
டெல்லி: டெல்லியில் இன்று, இந்திய- ஆப்பிரிக்க நாடுகளின் உச்சி மாநாட்டு தொடங்கியது. 54 ஆப்பிரிக்க நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.
வர்த்தக ரீதியில் இந்திய-ஆப்பிரிக்க நாடுகளின் உறவுகளை பலப்படுத்தவும், எண்ணெய், எரிவாயுத் துறையில் முதலீடு, கடல் சார்ந்த ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்தவும் டெல்லியில் 4 நாள்கள் நடைபெற உள்ள 3ஆவது வர்த்தக உச்சி மாநாடு, 26ம் தேதி திங்கள்கிழமையான இன்று தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறுகிறது.

54 ஆப்பிரிக்க நாடுகள் கலந்து கொள்ளும் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா அல்-சிசி, இந்தியாவுக்கு முதல் முறையாக வருகை தந்துள்ளார்.
2008 மற்றும் 2011ம் ஆண்டுகளில் இதுபோன்ற மாநாடுகள் டெல்லி மற்றும் அட்டிஸ் அபாபா நகரங்களில் நடந்துள்ளன. ஆனால், இப்போது போல முன் எப்போதும் 54 நாட்டு முக்கிய பிரதிநிதிகளும் ஒன்றாக சேர்ந்து பங்கேற்கவில்லை. இதில் 40 பேர், அந்தந்த நாட்டின் மத்திய அல்லது மாநில அரசுகளின் தலைமை பதவிகளில் இருப்பவர்கள் என்பது இதில் சிறப்பு.

முக்கியத்துவம் என்ன?: இந்த மாநாட்டால், இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு பரஸ்பர பலன் கிடைக்கும். வணிகத்துறையில் கூடுதல் முதலீடு, பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு, தீவிரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு, கடல்படை பாதுகாப்பில் ஒத்துழைப்பு, வறுமை ஒழிப்பு, நோய் ஒழிப்பு, கல்வித்தர மேம்பாடு போன்றவை குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
36 ஆப்பிரி்க்க நாடுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 சதவீதமாக வளரும் வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறும் நிலையில், இந்தியா அங்கு முதலீடுகள் செய்ய இது வாய்ப்பாக அமையும்.
அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஏற்கனவே, ஆப்பிரிக்க நாடுகளுடன் மாநாட்டு உறவை மேம்படுத்தியுள்ளன. இந்நிலையில்தான், இந்தியாவும், ஆப்பிரிக்க நாடுகளோடு நெருங்கிக்கொண்டுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications