ஏமனில் உள்நாட்டு கலவரம்.. இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய அரசு அறிவுறுத்தல்
டெல்லி: அரபு நாடான ஏமனில் உள்நாட்டுப் போர் வலுத்து வருகிறது. ஹவுதி என அழைக்கப்படுகிற ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்கள் அங்கு அரசு படையை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர். ஏதன் நகரை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிற கிளர்ச்சியாளர்கள் அங்குள்ள விமான தளம் ஒன்றை கைப்பற்றினர்.
மேலும், அதிபர் அபெத் ராபோ மன்சூர் ஹாதியின் மாளிகை மீது அடையாளம் தெரியாத போர் விமானங்கள் ராக்கெட் வீச்சு நடத்தி உள்ளனர்.

ஆனால் அதிபர் ஹாதி, ஹெலிகாப்டர் மூலம் சவூதி அரேபிய தூதரக அதிகாரிகளுடன் அந்த நகரிலிருந்து வெளியேறி விட்டதாக ஒரு தகவல் கூறுகிறது. இன்னொரு தகவல், அவர் நகரை விட்டு வெளியேறவில்லை எனவும் சொல்கிறது.
இருப்பினும் ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரமாகி வருவதால் அங்கு வசிக்கிற இந்தியர்கள் அனைவரும் உடனே நாடு திரும்பி விடுமாறு மத்திய அரசு அறிவுரை பிறப்பித்துள்ளது. இதை டெல்லியில் நிருபர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்தார்.
ஏமன் நாட்டில் பல்வேறு இடங்களில் இந்தியாவை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் நர்சுகள் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications