முடிச்சிட்டாங்க.. ஜார்கண்ட்டில் ‛இந்தியா’ கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு.. யாருக்கு எத்தனை சீட்?
ராஞ்சி: ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் ‛இந்தியா' கூட்டணியின் தொகுதி பங்கீடு கடும் இழுபறிக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி அதிகபட்சமாக முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 30 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. 3 தொகுதிகளில் உடன்பாடு ஏற்படாததால் அங்கு தனித்தனியாக போட்டியிடுகின்றனர்.
ஜார்கண்ட் முதல்வராக இருப்பவர் ஹேமந்த் சோரன். இவர் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை நடத்தி வருகிறார். ஹேமந்த் சோரன், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறார். தற்போது ஜார்கண்ட் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 13, நவம்பர் 20 என 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 41 தொகுதிகளில் வெல்ல வேண்டும். இந்நிலையில் மீண்டும் ‛இந்தியா' கூட்டணி அமைந்துள்ளது.
இந்த ‛இந்தியா' கூட்டணியில் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி, இடதுசாரிகள் உள்ளன. கூட்டணி பங்கீட்டில் கடும் இழுபறி நிலவி வந்தது. வேட்புமனுத்தாக்கல்கள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று ஒருவழியாக கூட்டணி பங்கீடு முடிவுக்கு வந்தது.
அதன்படி மொத்தமுள்ள 82 தொகுதிகளில் அதிகபட்சமாக முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 43 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதற்கு அடுத்தப்படியாக காங்கிரஸ் கட்சி 30 தொகுதிகளில் போட்டியிடுகிறார். மேலும் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சிக்கு 6 இடங்களும், இடதுசாரிகளுக்கு 3 தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தான்வார், சத்ராபூர், விஷ்ராம்பூர் தொகுதிகளில் ‛இந்தியா' கூட்டணி கட்சியினர் தனித்தனியாக போட்டியிடுகின்றனர். ஜார்கண்ட்டை பொறுத்தவரை பாஜக சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறது. பாஜக கூட்டணியில் ஏஜேஎஸ்யூ, ஐஜத, எல்ஜேபி கட்சிகள் உள்ளன. மொத்தம் 81 தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக 62 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
முன்னதாக கடந்த 2019 ல் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கு தனி பெரும்பான்மை என்பது கிடைக்கவில்லை. அதிகபட்சமாக ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 30 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியது. அதேபோல் பாஜக 25 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் வென்றது. அதேபோல் ஜேவிஎம்(பி) கட்சி 3 இடங்களிலும், ஏஜேஎஸ்யூ கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இதையடுத்து ஜார்கண்ட்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி என்பது அமைந்தது. ஆட்சியை பிடிக்க 41 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் இந்த கூட்டணிக்கு 46 எம்எல்ஏக்கள் இருந்தனர். முதல்வராக ஹேமந்த் சோரன் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். பாஜக எதிர்க்கட்சியாக செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications