Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முடிச்சிட்டாங்க.. ஜார்கண்ட்டில் ‛இந்தியா’ கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு.. யாருக்கு எத்தனை சீட்?

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் ‛இந்தியா' கூட்டணியின் தொகுதி பங்கீடு கடும் இழுபறிக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி அதிகபட்சமாக முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 30 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. 3 தொகுதிகளில் உடன்பாடு ஏற்படாததால் அங்கு தனித்தனியாக போட்டியிடுகின்றனர்.

ஜார்கண்ட் முதல்வராக இருப்பவர் ஹேமந்த் சோரன். இவர் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை நடத்தி வருகிறார். ஹேமந்த் சோரன், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறார். தற்போது ஜார்கண்ட் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

jharkhand assembly election 2024 india bloc congress 2024

நவம்பர் 13, நவம்பர் 20 என 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 41 தொகுதிகளில் வெல்ல வேண்டும். இந்நிலையில் மீண்டும் ‛இந்தியா' கூட்டணி அமைந்துள்ளது.

இந்த ‛இந்தியா' கூட்டணியில் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி, இடதுசாரிகள் உள்ளன. கூட்டணி பங்கீட்டில் கடும் இழுபறி நிலவி வந்தது. வேட்புமனுத்தாக்கல்கள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று ஒருவழியாக கூட்டணி பங்கீடு முடிவுக்கு வந்தது.

அதன்படி மொத்தமுள்ள 82 தொகுதிகளில் அதிகபட்சமாக முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 43 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதற்கு அடுத்தப்படியாக காங்கிரஸ் கட்சி 30 தொகுதிகளில் போட்டியிடுகிறார். மேலும் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சிக்கு 6 இடங்களும், இடதுசாரிகளுக்கு 3 தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தான்வார், சத்ராபூர், விஷ்ராம்பூர் தொகுதிகளில் ‛இந்தியா' கூட்டணி கட்சியினர் தனித்தனியாக போட்டியிடுகின்றனர். ஜார்கண்ட்டை பொறுத்தவரை பாஜக சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறது. பாஜக கூட்டணியில் ஏஜேஎஸ்யூ, ஐஜத, எல்ஜேபி கட்சிகள் உள்ளன. மொத்தம் 81 தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக 62 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

முன்னதாக கடந்த 2019 ல் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கு தனி பெரும்பான்மை என்பது கிடைக்கவில்லை. அதிகபட்சமாக ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 30 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியது. அதேபோல் பாஜக 25 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் வென்றது. அதேபோல் ஜேவிஎம்(பி) கட்சி 3 இடங்களிலும், ஏஜேஎஸ்யூ கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றது.

இதையடுத்து ஜார்கண்ட்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி என்பது அமைந்தது. ஆட்சியை பிடிக்க 41 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் இந்த கூட்டணிக்கு 46 எம்எல்ஏக்கள் இருந்தனர். முதல்வராக ஹேமந்த் சோரன் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். பாஜக எதிர்க்கட்சியாக செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+