லடாக் எல்லையில் துப்பாக்கிச் சூடு: இந்தியா-சீனா சிறப்பு பிரதிநிதிகள் விரைவில் பேச்சுவார்த்தை
டெல்லி: லடாக் எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில் இந்தியா- சீனா சிறப்பு பிரதிநிதிகள் இடையேயான பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லையில் சீனாவின் தொடர்ச்சியான ஊடுருவல்கள், முறியடிப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்குள் ஊடுருவி சீனா தாக்குதல் நடத்தியது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

அதிகரிக்கும் பதற்றம்
இந்தியாவில் பதிலடியில் 40 சீன வீரர்கள் இறந்தனர். இதன்பின்னரும் சீனாவின் அத்துமீறல்கள் தொடருகின்றன. இந்த நிலையில் இந்திய படைகளை நோக்கி சீனா துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது எல்லையில் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.

இந்தியா கடும் கண்டனம்
கடந்த 45 ஆண்டுகளில் முதல் முறையாக எல்லையில் சீனா துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது நிலைமையை மோசமாக்கி இருக்கிறது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை இந்தியா வன்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டது. ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை சீனா கைவிட வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

ரஷ்யாவுக்கு ஜெய்சங்கர் பயணம்
இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யா பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரை டெஹ்ரானில் ஜெய்சங்கர் சந்தித்து பேசியிருந்தார்.

இந்தியா- சீனா பேச்சுவார்த்தை
இதனிடையே இந்தியா-சீனாவின் சிறப்பு பிரதிநிதிகள் இடையேயான பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ரஷ்யாவின் உதவியுடன் இந்த சிறப்பு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications