Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

7 மாதங்களில் இல்லாத உச்சம்.. 750ஐ தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு.. தென்மாநிலங்களில் நிலைமை மோசம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று நாட்டில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக நமது அண்டை மாநிலமான கேரளாவில் வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

 India daily corona cases touched 752 a 7-month high, amid new JN1 corona variant

குளிர் காலம் என்பதாலும் புதிய வகை ஜேஎன் 1 கொரோனாவாலும் வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசும் அனைத்து மாநில அரசுகளுக்கும் வழிகாட்டுதல்களை அளித்திருந்தது.

7 மாதங்களில் இல்லாத உச்சம்: இதற்கிடையே இன்று ஒரே நாளில் இந்தியாவில் 752 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கடந்த 7 மாதங்களில் இந்தியாவில் பதிவான அதிகபட்ச கொரோனா கேஸ்கள் இதுவாகும். இதற்கு முன்னதாக கடந்த மே 21ஆம் தேதி தான் அதிகபட்சமாக இருந்தது. கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நமது நாட்டில் இப்போது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 3,000ஐ தாண்டி இருக்கிறது. இந்தியாவில் இப்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3,420ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய ஜேஎன் 1 கொரோனா வகை பொதுமக்களிடையே ஏற்கனவே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், வைரஸ் பாதிப்பும் அதிகரிப்பது அச்சத்தை அதிகரித்துள்ளது.

உயிரிழப்பு: மேலும், காலை 8 மணி வரையிலான தகவல்படி, 24 மணி நேரத்தில் நமது நாட்டில் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாகக் கேரளாவில் இரண்டு பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் தலா ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நமது நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 5,33,332ஆக உயர்ந்துள்ளது. நமது நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் 1.18 சதவீதமாக உள்ளது.

தென்மாநிலங்கள்: இப்போது நமது நாட்டில் கொரோனா கேஸ்கள் எண்ணிக்கை 4.50 கோடியாக (4,50,07,964) உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 17 மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. தென் மாநிலங்களான கேரளா (266), கர்நாடகா (70) மாநிலங்களில் தான் வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளது. தொடர்ந்து மகாராஷ்டிரா (15), தமிழ்நாடு (13) மற்றும் குஜராத் (12) ஆகிய மாநிலங்கள் கொரோனா பாதிப்பு 10ஐ தாண்டியுள்ளது.

உயரும் கொரோனா:
இது தவிரக் கடந்த 24 மணி நேரத்தில் 325 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,71,212 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை, இந்தியாவில் 640 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று அது 750ஐ தாண்டியுள்ளது. மேலும், கொரோனா உயிரிழப்புகள், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போது கொரோனா கேஸ்கள் அதிகரித்தாலும் கூட இது குறித்து நாம் இப்போது கவலையடையத் தேவையில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதியவர்களும் இணை நோய் உள்ளவர்களும் மாக்ஸ் அணியும்படி அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் 60 வயதைக் கடந்தவர்களுக்கும் இணை நோய் உள்ளவர்களுக்கும் மாஸ்க் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

என்ன காரணம்:
இப்போது இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கிறது. இதற்கு ஜேஎன்.1 என்ற புதிய கொரோனா வேரியண்ட் தான் காரணம். இந்த ஜேஎன்.1, கொரோனா ஓமிக்ரான் வேரியண்டின் துணை வகையாகும். இதை உலக சுகாதார அமைப்பும் கண்காணிக்க வேண்டிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+