7 மாதங்களில் இல்லாத உச்சம்.. 750ஐ தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு.. தென்மாநிலங்களில் நிலைமை மோசம்!
டெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று நாட்டில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக நமது அண்டை மாநிலமான கேரளாவில் வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

குளிர் காலம் என்பதாலும் புதிய வகை ஜேஎன் 1 கொரோனாவாலும் வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசும் அனைத்து மாநில அரசுகளுக்கும் வழிகாட்டுதல்களை அளித்திருந்தது.
7 மாதங்களில் இல்லாத உச்சம்: இதற்கிடையே இன்று ஒரே நாளில் இந்தியாவில் 752 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கடந்த 7 மாதங்களில் இந்தியாவில் பதிவான அதிகபட்ச கொரோனா கேஸ்கள் இதுவாகும். இதற்கு முன்னதாக கடந்த மே 21ஆம் தேதி தான் அதிகபட்சமாக இருந்தது. கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நமது நாட்டில் இப்போது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 3,000ஐ தாண்டி இருக்கிறது. இந்தியாவில் இப்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3,420ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய ஜேஎன் 1 கொரோனா வகை பொதுமக்களிடையே ஏற்கனவே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், வைரஸ் பாதிப்பும் அதிகரிப்பது அச்சத்தை அதிகரித்துள்ளது.
உயிரிழப்பு: மேலும், காலை 8 மணி வரையிலான தகவல்படி, 24 மணி நேரத்தில் நமது நாட்டில் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாகக் கேரளாவில் இரண்டு பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் தலா ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நமது நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 5,33,332ஆக உயர்ந்துள்ளது. நமது நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் 1.18 சதவீதமாக உள்ளது.
தென்மாநிலங்கள்: இப்போது நமது நாட்டில் கொரோனா கேஸ்கள் எண்ணிக்கை 4.50 கோடியாக (4,50,07,964) உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 17 மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. தென் மாநிலங்களான கேரளா (266), கர்நாடகா (70) மாநிலங்களில் தான் வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளது. தொடர்ந்து மகாராஷ்டிரா (15), தமிழ்நாடு (13) மற்றும் குஜராத் (12) ஆகிய மாநிலங்கள் கொரோனா பாதிப்பு 10ஐ தாண்டியுள்ளது.
உயரும் கொரோனா: இது தவிரக் கடந்த 24 மணி நேரத்தில் 325 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,71,212 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை, இந்தியாவில் 640 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று அது 750ஐ தாண்டியுள்ளது. மேலும், கொரோனா உயிரிழப்புகள், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தற்போது கொரோனா கேஸ்கள் அதிகரித்தாலும் கூட இது குறித்து நாம் இப்போது கவலையடையத் தேவையில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதியவர்களும் இணை நோய் உள்ளவர்களும் மாக்ஸ் அணியும்படி அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் 60 வயதைக் கடந்தவர்களுக்கும் இணை நோய் உள்ளவர்களுக்கும் மாஸ்க் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்: இப்போது இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கிறது. இதற்கு ஜேஎன்.1 என்ற புதிய கொரோனா வேரியண்ட் தான் காரணம். இந்த ஜேஎன்.1, கொரோனா ஓமிக்ரான் வேரியண்டின் துணை வகையாகும். இதை உலக சுகாதார அமைப்பும் கண்காணிக்க வேண்டிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications