த்தூ முதல் கொலை வரை.. பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பில்லா நாடுகளில் இந்தியாவுக்கு 3வது இடம்
டெல்லி: பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில், 3வது இடத்தை பிடித்துள்ளது, ஜனநாயகத்திற்கு பெயர் பெற்ற இந்தியா.
அரசியல்வாதிகள் துப்புவது, நாயி என புலம்புவது என்பதை தாண்டி, வழக்குகள் போடுவது, மிரட்டுவது போன்றவையும், எல்லாவற்றுக்கும் மேலாக பத்திரிகையாளரையே கொலை செய்வதும், இந்தியாவில் அதிகரித்துள்ளது.

உலகின் பெரும் ஜனநாயக நாடு என மார்தட்டும் இந்தியாதான், பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான உலகிலேயே மோசமான 3வது நாடு என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வித்அவுட் பார்டர்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் இத்தகவல் அம்பலமாகியுள்ளது.
இவ்வாண்டில் இதுவரை, இந்தியாவில், 9 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் நால்வர் கொலைக்கான காரணமே இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
போரால் சீரழியும், ஈராக் இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 11. இதற்கு அடுத்தபடியாக மற்றொரு போர் நாடான சிரியாவில் 10 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். போர் பாதிப்பில்லாத 'அமைதி பூங்காவான' இந்தியாவில், 9 பேர் கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications