அதிர்ச்சி.. கொரோனா குணமாகியதாக அறிவித்து டிஸ்சார்ஜ் ஆனவர் பலி.. இந்தியாவில் உயிரிழப்பு 5ஆக உயர்வு
ஜெய்ப்பூர்: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிகிச்சை பெற்றுவந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒரு முதியவர் இன்று உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் 173 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. இதில் ஒருவர்தான் இத்தாலியை சேர்ந்த 69 வயது முதியவர். இவர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் உள்ள எஸ்எம்எஸ் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்தபோது இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். ஆனால், நோயிலிருந்து குணம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் இதுகுறித்து கூறுகையில், 4 நாட்கள் முன்பு இவருக்கு பரிசோதனை செய்யப்பட்டபோது, கொரோனா குணமடைந்துவிட்டதாக ரிசல்ட் வெளியானது. ஆனால், மறுபடியும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்குதான், அவர் பலியாகியுள்ளார். இவ்வாறு ஏ.என்.ஐ செய்தி தெரிவிக்கிறது.
கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இதற்கு முன்பு தலா ஒரு நோயாளி பலியாகிய நிலையில் ராஜஸ்தானில் இந்த நோய்க்கு முதல் நபர் பலியாகியுள்ளார். இதன் மூலமாக வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
-
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி












Click it and Unblock the Notifications