தேவயானி மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் : அமெரிக்காவை வலியுறுத்தும் இந்தியா

விசா மோசடி குற்றம் சாட்டப் பட்டு இந்திய துணை தூதர் தேவ்யானி கோப்ரகடே பொது இடத்தில் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார். தூதர் கைவிலங்கிட்டு கைது செய்த அமெரிக்கவை கண்டித்த இந்தியா, உடனடியாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவெலை நேரில் வரவழைத்து, இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு தெரிவித்தது.
இந்நிலையில் நேற்று மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின் போது பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், அமெரிக்காவில் இந்திய துணை தூதர் தேவ்யானி கைது செய்யப்பட்ட நடவடிக்கையில் சதி உள்ளது. சதி திட்டத்தில் அவர் சிக்க வைக்கப்பட்டுள்ளார். துணை தூதரின் கவுரவத்தை காக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், ‘எனக்கு நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது நான் வெளியில் சென்றிருந்தேன். அதனால் அந்த அழைப்பை ஏற்க இயலவில்லை. கெர்ரி தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கிறார். அந்நாட்டிற்கும் நமக்கும் நேர வித்தியாசம் பெரிய அளவில் இருப்பதால் இன்று மாலைக்குள் கெர்ரியிடம் பேச திட்டமிட்டுள்ளேன்.
தூதர் கைது விஷயத்தில் என்ன நடந்தது என்ற விவரத்தை தான் எதிர்பார்க்கிறேன். தேவையற்ற இம்மாதிரியான நடவடிக்கை இனியும் தொடரக்கூடாது. தற்போது போடப்பட்ட வழக்கையும் திரும்ப பெற வேண்டும் என நான் விரும்புகிறேன். அமெரிக்காவுடனான நம்முடைய உறவு மிகப்பெரிய முதலீடுகளை கொண்டது. இதில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த முடிவும் எடுக்கமுடியாது. மிகவும் கவனமுடன் இப்பிரச்சனையை கையாளவேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தூதர் கைது விஷயத்தில் இந்தியா மிகுந்த வருத்தத்தில் உள்ளது என்பதை வெளிப்படித்தும் விதமாகவே கெர்ரியின் அழைப்பை குர்ஷித் புறக்கணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications