4640 இந்தியர்கள் மீட்பு... ஏமனில் மீட்பு பணி நிறைவு... நாடு திரும்பினார் வி.கே.சிங்
டெல்லி: உள்நாட்டுப் போர் நடந்து வரும் ஏமனில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணி நிறைவடைந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
ஏமன் அரசுக்கு எதிராக ஹவுதி புரட்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையில் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டு வருகிறது. இதனால், அங்கு உள்நாட்டுப் போர் தீவிரமாக நடந்து வருகிறது.

எனவே, ஏமனில் சிக்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது. நாலாயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் மீட்கப் பட்டதைத் தொடர்ந்து, மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், ‘இதுவரை ஏமனில் இருந்து 4640 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணிகள் நிறைவடைந்துள்ளதையடுத்து, ஏமனில் உள்ள இந்திய தூதரகம் மூடப்படுகிறது' என்றார்.
கடந்த மார்ச் 31ம் தேதி துவங்கிய மீட்புபணியில் 18 இந்திய விமானப்படை சிறப்பு விமானங்கள் மூலம் 2900 இந்தியர்களும், கடற்படை மூலம் 1,670 இந்தியர்களும் மீட்கப்பட்டனர். இந்தியாவின் மீட்புப் பணியில் 41 நாடுகளைச் சேர்ந்த 960 வெளிநாட்டவர்களும் மீட்கப் பட்டுள்ளனர்.
ஏமனில் சிக்கி தவித்த இந்தியர்கள் மீட்கும் பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்து மத்திய அமைச்சர் வி.கே.சிங் நாடு திரும்பினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications