ஜூன் 18ம் தேதி இந்திய விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக ....

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய விமானப்படைக்கு வரும் ஜூன் மாதம் 18ம் தேதி அன்று முதல் பெண் போர் விமான பைலட் கிடைப்பார் என்று விமானப்படை தளபதி அரூப் ராஹா தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படை தளபதி அரூப் ராஹா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

விமானப்படையில் பயிற்சி பெறும் பெண்களில் 3 பேர் போர் விமானங்களை இயக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் இரண்டாம் கட்ட பயிற்சி பெற்று வருகிறார்கள்.

India to get first women fighter pilots in June

அவர்கள் பயிற்சியை முடித்து வரும் ஜூன் மாதம் 18ம் தேதி நடக்கும் தேர்ச்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். அன்றைய தினம் விமானப்படையின் முதல் பெண் போர் விமான பைலட் கிடைப்பார்.

போர் விமானங்களை இயக்க பெண்களுக்கு அனுமதி அளிக்கும் திட்டத்தை ஏற்றுக் கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

போர் விமானங்களை இயக்கும் அளவுக்கு பெண்களுக்கு உடல் வலிமை இல்லை என்று ராஹா கடந்த ஆண்டு மார்ச் மாதம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+