சுதந்திரதினவிழாவில் குழந்தைகளோடு குழந்தைகளாக மாறிய மோடி
சுதந்திரதினவிழாவில் கொடியேற்றி உரையாற்றிய பிரதமர் மோடி, பாதுகாப்பை மீறி பள்ளி குழந்தைகளிடம் சென்று பேசினார்.
டெல்லி: டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின கொடியை ஏற்றி வைத்து உரையாற்றியபின்னர் பிரதமர் மோடி, தனது காரில் இருந்து இறங்கி மாணவர்களிடம் சென்று பேசினார்.
டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய பின்னர் பேசிய மோடி, கிருஷ்ண ஜெயந்தியும், சுதந்திர தினமும் ஒரே சமயத்தில் கொண்டாடுகிறோம் என்றார்.

மேலும் தீவிரவாதத்திற்கு எதிராக நமது போராட்டம் என்றும் நீடித்திருக்கும். இந்த போராட்டத்தில் முப்படை வீரர்களின் தியாகம் போற்றத்தக்கது.
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் நாம் தனியாக இல்லை, நமக்கு ஆதரவு கரம் நீட்ட பல நாடுகள் முன்வந்துள்ளன. ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.
உரையை முடிக்கும் முன்பாக 'ஜெய் ஹிந்த்', 'வந்தே மாதரம்', 'பாரத் மாதா கி ஜெய்' என்று கூறியதும் கூட்டத்தினரும் பின்னாலேயே உற்சாகமாக குரல் எழுப்பினர்.
மோடி தனது உரையை முடித்துக்கொண்டு காரில் கிளம்பினார், அவரது கான்வாய் பின்தொடர்ந்தது. திடீரென்று என்ன நினைத்தாரோ பள்ளி குழந்தைகள் அமர்ந்திருந்த இடத்தின் அருகே காரை நிறுத்தச் சொன்னார்.
பிரதமர் மோடியின் வாகனம் நின்ற உடனேயே மாணவர்கள் உற்சாக குரல் எழுப்பினர். காரை விட்டு இறங்கிய மோடி, தனது பாதுகாவலர்களின் பாதுகாப்பையும் மீறி மாணவர்கள் கூட்டத்திற்குள் புகுந்தார்.
மாணவ, மாணவிகளின் உற்சாகத்திற்கிடையே பலருக்கும் கை கொடுத்தார் மோடி. கூட்டம் அதிகாரிக்கவே, உள்ளே புகுந்த பாதுகாவலர்கள், மாணவர்களை கட்டுப்படுத்தினர்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications