இந்தியா, அகதிகளுக்கான தலைநகரம் கிடையாது.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்
அகதிகளுக்கான உலக தலைநகரமாக இந்தியா மாறுவதை விரும்பவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது
டெல்லி: ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறித்த வழக்கு ஒன்றில் பதிலளித்துள்ள மத்திய அரசு, அகதிகளுக்கான உலக தலைநகரமாக இந்தியா மாறுவதை விரும்பவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது
மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறிவைத்து கொத்து கொத்தாக கொள்ளப்படுவதாகவும், மியான்மர் ராணுவத்தின் இந்த கொடூர செயலிலிருந்து அப்பாவி ரோஹிங்கியா முஸ்லிம்கள் தப்பித்து அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். மியன்மர் நாட்டின் எல்லையில் கிரனேட் தாக்குதல், கன்னிவெடித்தாக்குதல், மிளகாய்ப்பொடித் தூவல் தாக்குதல் ஆகியவற்றிலிருந்து தப்பித்து ரோஹிங்கிய முஸ்லிம்கள் நாடு நாடாக அகதிகளாக தங்கி வருகின்றனர்.

இதுவரை இந்தியாவில் இவ்வாறு பல நூற்றுக்கணக்கானோர் தங்கி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவ்வாறு எல்லைக்கு வரும் ரோஹிங்கியா முஸ்லிம்களை பாதுகாப்புப் படையினர் மியன்மர் வீரர்களை செய்யும் அதே தாக்குதல்களை பின்பற்றி திருப்பி அனுப்பிவிடுவதாக உச்ச நீதிமன்றத்தில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் சார்பில் மனு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, அகதிகளின் உலகத் தலைநகரமாக இந்தியா மாறுவதை விரும்பவில்லை என்றும், பல பிரச்சனைகளாலும், உள்நாட்டு கலவரங்களாலும் ஒவ்வொரு அண்டை நாடுகளிலிருந்தும் இந்தியாவுக்கு கூட்டமாக நிறைய பேர் வருகிறார்கள் என்று மத்திய அரசு சார்பாக விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் அகதிகளை இந்தியாவிற்குள் அனுமதிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், இதைவிட மிகப்பெரிய பிரச்சனைகள் இருப்பதால் இதில் முடிவெடுக்க வேண்டியது அவசரமல்ல என்று மத்திய அரசு சார்பாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும் இதில் உச்சநீதிமன்றம் தலையிடுமளவுக்கான பெரிய விஷயம் அல்ல என்றும் அரசு சார்பாக வாதிடப்பட்டது. இதனையடுத்து அடுத்த வழக்கு விசாரணை மார்ச் 7-ம் தேதியன்று நடைபெறும் போது இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க உச்சநீதிமன்ற அமர்வு அவகாசம் அளித்தது.
இந்நிலையில் இந்தியாவில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் படுமோசமான சூழ்நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும், மரணத்திற்கான வாயிலில் மீண்டும் அவர்களை அனுப்புவது கொடுஞ்செயல் என்றும் அவர்களுக்கு ஆதரவாக பிரசாந்த் பூஷன் வாதிட்டதையும் நீதிபதிகள் பரிசீலிப்பதாக தெரிவித்தனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications