இந்தியாவிலிருந்து 4,300 கோடீஸ்வரர்கள் வெளிநாட்டில் குடியேறப்போறாங்களாம்! இந்த நாடுதான் முதல் சாய்ஸ்
டெல்லி: 2024ம் ஆண்டில் மட்டும், இந்தியாவைச் சேர்ந்த சுமார் 4,300 கோடீஸ்வரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று குண்டை போட்டுள்ளது சர்வதேச முதலீட்டு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ். ஆனால், ஹேப்பி நியூஸ் ஒன்றும் இருக்கிறது. இந்தியா ஒன்றும் இவர்களை நம்பி இல்லையாம். ஆண்டுதோறும் பல புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கி வருகிறது என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
"எங்கள் பார்வையில், இந்தியா இழப்பதை விட அதிகமான புதிய கோடீஸ்வரர்களை உற்பத்தி செய்து வருவதால், இந்த இடப்பெயர்வு கவலைக்குரியவை அல்ல" என்று அந்த அறிக்கை கோடிட்டு காட்டியுள்ளது. "மேலும், இந்தியாவை விட்டு வெளியேறும் கோடீஸ்வரர்களில் பெரும்பாலோர், நாட்டின் வணிக தொடர்பை தக்க வைத்துக் கொள்ள முனைகிறார்கள், இது ஒரு பாசிட்டிவ் அறிகுறியாகும்." என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

என்னதான், செல்வந்தர்கள் இடம்பெயர்ந்தாலும், தங்களுடைய சொத்துக்கள் மற்றும் முதலீடுகள் மூலம் உள்ளூர் பொருளாதாரத்திற்கு தொடர்ந்து பங்களிக்கின்றனர். இந்தியாவில் அவர்களின் வணிகங்கள் மற்றும் வீடுகள் தொடர்ந்து இருப்பது பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்க உதவுகிறதாம்.
பல இந்திய கோடீஸ்வரர்களின் முதல் சாய்ஸ் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்கிறார்கள். 2024 ஆம் ஆண்டில், உலகளவில் சுமார் 128,000 மில்லியனர்கள் இடம்பெயர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, UAE மற்றும் USA ஆகியவை அவர்களின் அடுத்தடுத்த சாய்ஸ்களாக உள்ளன. இந்த கோடீஸ்வரர்களால் தொடங்கப்பட்ட தொழில்கள் நடுத்தர வர்க்கத்தினருக்கு குறிப்பிடத்தக்க வகையில் பலனளிப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக, மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் டெஸ்லா போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான உயர் ஊதிய வேலைகளை உருவாக்கியுள்ளன, இது மில்லியனர்களின் வணிகங்கள் ஏற்படுத்தக்கூடிய பொருளாதார தாக்கத்தைக் காட்டுகிறது.
ஒரு நாடு அதிக எண்ணிக்கையிலான மில்லியனர்களை குடியேற்றத்தால் இழக்கிறது என்றால், அது அந்த நாட்டில் கடுமையான பிரச்சனைகளால் இருக்கலாம், ஏனெனில் சிக்கல்கள் ஏற்படும் போதுதான், செல்வந்தர்கள் பெரும்பாலும் வெளியேறுகிறார்கள்.
இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், புதிய பணக்காரர்கள் உருவாக்குவது கணிசமான அளவில், பொருளாதார பங்களிப்பை தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது. ஆனால் கிளிக்கு றெக்கை முழைச்சிடுச்சி வீட்டை விட்டு பறந்து போய்விட்டது என்பது போல பெரும் பணக்காரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு போவதற்குதான் ஆசைப்படுகிறார்கள் என்பதை உணர்த்தியுள்ளது இந்த டேட்டா.
-
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications