வாஷிங்டனிலிருந்து அறிவிப்பு வந்தது ஏன்? 18 நாட்கள் நடந்தது என்ன? நாடாளுமன்றத்தை கூட்டுங்க- காங்கிரஸ்
டெல்லி: இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்தம் செய்யப்பட்டது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிகள் கூட்டம் மற்றும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி இருக்கிறது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதலை இந்திய ராணுவம் கையில் எடுத்தது. இதில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால், பாகிஸ்தான் ராணுவமும் இந்திய எல்லையோரங்களில் ட்ரோன் தாக்குதல் மற்றும் பீரங்கி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

இதில் காஷ்மீரில் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி தந்தது. இந்த தருணத்தில் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்படுத்தி இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென்று சமூக வலைத்தளத்தில் அறிவித்தார். இதனால் இரு நாடுகளும் கடந்த இரண்டு நாட்களாக நடந்த தாக்குதலை நிறுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், இந்தியாவும் பாகிஸ்தானும் தற்போது போர் நிறுத்தத்தை உடனடியாக மேற்கொண்டு இருக்கிறது. இந்த தருணத்தில் தான் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து கட்சி கூட்டத்தையும் அழைத்து பேச வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது.
இதேபோன்று கடந்த 18 நாட்களில் என்ன நடந்தது என்பது குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரை கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வாஷிங்டனில் இருந்து யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். மேலும் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்த 18 நாட்களில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரை கூட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு நாட்டில் உள்ள திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பிரதான கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications