ஐஎஸ் அமைப்புக்கு எதிராக இந்திய இமாம்கள் பத்வா: மோடியின் திட்டம் 'சக்சஸ்'
டெல்லி: மிதவாத முஸ்லீம்களை ஊக்குவிப்பது என்ற மத்திய அரசின் முடிவுக்கு பலன் கிடைக்கத் துவங்கியுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியாவைச் சேர்ந்த சுமார் 1000 இமாம்கள் பத்வா விட்டுள்ளது பெரிய விஷயம் ஆகும்.
இந்தியாவைச் சேர்ந்த சுமார் ஆயிரம் இமாம்கள், முப்திகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிராக பத்வா விட்டுள்ளனர். அப்பாவி மக்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை செய்வதற்கு பத்வாவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொள்கைள் இஸ்லாத்திற்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பத்வாவின் நகல் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா உள்பட 47 நாடுகளுக்கும் நகல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தான் செய்யும் அட்டகாசங்கள் அனைத்தும் ஷரியா சட்டம் என்று கூறி இஸ்லாத்தின் பெயரை கெடுத்து வருகிறது. இந்நிலையில் தான் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கூறுவது போன்று மக்களை கொல்வதும், காயப்படுத்துவதும் ஷரியா சட்டம் அல்ல என்று பத்வாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாம்கள் வெளியிட்டுள்ள இந்த பத்வா இந்திய அரசுக்கு வரமாக அமைந்துள்ளது.
ஆயிரம் பேர் விடுத்துள்ள பத்வாவால் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேரத் துடிக்கும் இந்திய இளைஞர்கள் இனி யோசிப்பார்கள். அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பரெல்வி சுபி அறிஞர்கள் 40 பேரை சந்தித்து பேசினர். மிதவாத இஸ்லாத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த சந்திப்பு நடந்தது.
அந்த சந்திப்பின்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அட்டகாசம் பற்றி பேசப்பட்டது. தீவிரவாதத்தால் சுபி கொள்கைகள் பலவீனமாக்கப்படுவதாக மோடி தெரிவித்தார். அத்தகைய தீவிரவாத சக்திகளுக்கு எதிராக சுபி அறிஞர்கள் சமூக வலைதளங்களில் குரல் கொடுக்க வேண்டும் என மோடி கேட்டுக் கொண்டார். அவ்வாறு செய்வதன் மூலம் இந்தியாவில் தீவிரவாதம் வேரூன்றாமல் இருக்கும் என்றார் மோடி.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications