இந்தியா- ரஷ்யா கூட்டு ராணுவப்பயிற்சி...சீனா- பாகிஸ்தான் அச்சுறுத்தலுக்கு பதிலடி!
எல்லையில் அச்சுறுத்தல் கொடுத்துவரும் சீனா மற்றும் பாகிஸ்தானை சமாளிக்க, ரஷ்யாவுடன் வரும் அக்டோபர் மாதம் 10 நாட்களுக்கு நமது ராணுவம் கூட்டு பயிற்சி மேற்கொள்ளவுள்ளது. இது முப்படைகளின் கூட்டுப்பயிற்சி என
டெல்லி: நாட்டின் எல்லையோரம் தினமும் பாகிஸ்தானும் சீனாவும் ராணுவ தொல்லை கொடுத்து போர் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இரண்டு நாடுகளையும் சமாளிக்க, ரஷ்ய நாட்டு ராணுவத்துடன் கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்ளவுள்ளது.
இந்த கூட்டுப்பயிற்சி வரும் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. அதில் இந்தியாவின் முப்படைகளும் ஆயுத பயிற்சியில் ஈடுபடுகின்றன. இதனால் இப்போதே அதற்கான ஏற்பாடுகளை இருநாட்டு ராணுவமும் மேற்கொண்டுள்ளன.

கடந்த சில மாதங்களாக சீனா மூலம் சிக்கிம் எல்லையிலும், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளால் காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களிலும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே இந்திய ராணுவம், ரஷ்யாவுடன் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட முடிவு செய்தது. இதற்கு ரஷ்யாவும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து 2 நாடுகளின் தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகியவை இணைந்து அக்டோபர் மாதம் 19ம் தேதி முதல் 10 நாட்கள் மாபெரும் போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இந்த பயிற்சி ரஷியாவின் மலைப்பகுதியான விளாடிவோஸ்டாக் உள்பட 3 பகுதிகளில் நடக்க
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த பயிற்சியில் இந்தியாவின் முப்படைகளையும் சேர்ந்த அதிகாரிகள், வீரர்கள் உள்பட 350 பேர் கலந்துகொள்கின்றனர். பயிற்சியின்போது, உண்மையில் போர் நடந்தால் அதை எப்படி எதிர்கொள்வது, வியூகம் அமைத்து தாக்குதல் நடத்துவது ஆகியவை குறித்த ஒத்திகைகள் தத்ரூபமாக நடத்தி காட்டப்படும் என்று இந்திய ராணுவ வட்டாரம் தெரிவிக்கிறது.
இந்திய ராணுவத்தின் முப்படைகளும் அன்னிய நாட்டுடன் ஒரே நேரத்தில் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல ரஷ்யாவுக்கும் இது முதல் முறை.
பிரதமர் மோடி ஜூன் மாதம் மேற்கொண்டிருந்த ரஷ்ய சுற்றுப்பயணத்தின்போது, இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவதற்கான ஒப்புதல்கள் அளிக்கப்பட்டன. அதன் படி முப்படை கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
வீரர்களே இல்லாமல் ரஷ்யாவை அலறவிடும் உக்ரைன்! புதினே எதிர்பார்க்காத சீக்ரெட் ஆயுதம் இறக்கிய ஜெலன்ஸ்கி -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications