இந்தியாவில் சர்க்கரை வியாதியஸ்தர்களின் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு
டெல்லி: இந்தியாவில் 1990ம் ஆண்டிலிருந்து சர்க்கரை வியாதியஸ்தர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறதாம். அதாவது 90ம் ஆண்டு முதல் 123 சதவீதம் வரை அது அதிகரித்துள்ளதாம்.
கடந்த 23 ஆண்டுகளில் இந்தியாவில் வரலாறு காணாத வகையில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதேசமயம், உலக அளவில் 43 சதவீதம் இது குறைந்துள்ளது.
உடல் பருமன், தூக்கமின்மை, சிறுநீரக தொற்று நோய், பக்கவாதம் உள்ளிட்டவற்றுடன் சர்க்கரை வியாதியும் இந்தியாவில் ஆண், பெண்களைப் பபாதிக்கும் நோயாக மாறியுள்ளது.
வாஷிங்டன் பல்கலைக்கவகத்தில் உள்ள மெட்ரிக்ஸ் சுகாதாரக் கழகம் இதுதொடர்பான ஆய்வை வெளியிட்டுள்ளது.

நோய்கள் குறித்து ஆய்வு...
188 நாடுகளைச் சேர்ந்த 310 வகையான நோய்கள் குறித்து இது ஆய்வு செய்துள்ளது. பெரும்பாலும் பணக்கார நாடுகளில்தான் சர்க்கரை வியாதி அதிகம் இருக்கும் என்பார்கள் ஆனல் தற்போது சீனா, இந்தியா, மெக்ஸிகோ போன்ற வளரும் நாடுகளிலும் இது அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.

டைப் 2 வகை...
டைப் 2 வகை சர்க்கரை வியாதிதான் வேகமாக பரவி வருகிறது. இது உடல் பருமனுக்குக் காரணமாகும்.

பொருளாதார வளர்ச்சி...
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கூட இந்த நோயின் பரவலுக்கு ஒரு முக்கியக் காரணம் என்கிறது ஆய்வு. இந்தியர்களின் வாழ்க்கை முறை கடந்த 20 ஆண்டுகளில் வெகுவாக மாறி விட்டது.

தூக்கமின்மை...
சாப்பிடும் பழக்கமும் மாறியுள்ளது. தூக்கமின்மையும் அதிகரித்துள்ளது.

உணவுப் பழக்க மாற்றம்...
இந்தியாவில் சர்க்கரை வியாதி வேகமாகப் பரவி வருகிறது. உணவுப் பழக்க மாற்றமே இதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள்.

மன அழுத்தம்...
வேலை நேரத்தில் ஒரு ஒழுங்கு இல்லாமை, மன அழுத்தம் அதிகரிப்பு, உடற்பயிற்சி இல்லாமை, மது அருந்தும் பழக்கம், அதிக அளவில்லா பாஸ்ட் புட் சாப்பிடுவது போன்றையும் பிற காரணங்களாகும்.

இதய நோய்கள்...
இளைஞர்களிடம் இப்போது இதய நோய்கள், ரத்த அழுத்தம், நரம்பியல் நோய்கள், மூட்டு வலி உள்ளிட்ட பல நோய்கள் சர்வ சாதாரணமாக சீக்கிரமே வந்து விடுவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

டாப் 10 நோய்கள்...
அதேசமயம், மலேரியா, டிபி போன்றவை குறைந்து வருகிறது. அதேசமயம், புற்றுநோயும் அதிகரித்து வருகிறது. 2013ம் ஆண்டில் இந்தியாவின் டாப் 10 நோய்களில் எட்டாவது இடத்தில் சர்க்கரை நோய் இருந்தது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications