இந்திய பொருளாதார வளர்ச்சி குறைந்தது உண்மைதான் - எஸ்பிஐ ரிப்போர்ட்!
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்தது உண்மைதான் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆய்வில் தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்திய பொருளாதார வளர்ச்சி மந்தநிலையை அடைந்திருப்பதற்கு தொழில்நுட்ப கணக்கீடு முறை காரணமல்ல இது தான் உண்மை நிலை என்று ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் ஆய்வறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
இந்திய பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடப் பயன்படுத்தும் சில தொழில்நுட்பக் காரணங்களால் மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கூறியிருந்தார். இந்நிலையில் எஸ்பிஐ இந்திய பொருளாதாரம் சரிந்துள்ளது உண்மைதான் என்று தெரிவித்துள்ளது.
எஸ்பிஐயின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்தே இந்திய பொருளாதாரத்தில் சுணக்கமான நிலை நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக இந்த நிதியாண்டின் முதல் காலாண்டிலும் பிரதிபலித்தது.

செலவீனங்களை கட்டுப்படுத்த வேண்டும்
இந்தச் சரிவில் இருந்து மீள அரசு தனது செலவீனங்களை கட்டுப்படுத்துவது மட்டுமே ஒரே வழியாக உள்ளது. இந்திய பொருளாதாரம் சரிவில் இருந்து மீள்வதற்குத் தேவையான உத்வேகத்தை அரசு அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

கவனமாக செயல்பட வேண்டும்
பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் செலவுகளைக் கண்டறிந்து கவனமாக பணத்தை செலவிட்டால் ஒழிய இந்த நிலைமையை சமாளிக்க முடியாது. சரிவில் இருந்து மீள இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது, முந்தைய அரசுகளும் இதனைச் செய்துள்ளன.

யுபிஏவிலும் சரிந்தது
கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதாரம் 5.7 சதவீதம் என்ற அளவுக்கு குறைந்தது குறித்து கருத்து தெரிவித்திருந்தார் அமித்ஷா. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2013 - 14 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதமாகக் குறைந்து பின்னர் 7.1 சதவீதம் என்ற அளவிற்கு உயர்ந்ததாக கூறியிருந்தார்.

எப்போது உயரும்?
இந்நிலையில் அவரது கருத்துக்கு மாறாக இந்திய பொருளாதார மந்த நிலை கணக்கிட பயன்படுத்தும் தொழில்நுட்பக் காரணங்கள் மட்டுமல்ல உண்மை நிலையும் அது தான் என்று எஸ்பிஐ தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சரிவு தற்காலிகமானது தான் எப்போது உயரும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது என்றும் அந்த அறிக்கையில் தெளிவாகக் கூறுப்பட்டுள்ளது.
-
மீண்டும் உயிர் பெறும் "இந்தியா.." மம்தா எடுக்கும் முயற்சி.. விஜய் உள்ளே.. ஸ்டாலின் வெளியே! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications