இந்தியத் தூதர் கைது மிகக் கடுமையானது.. சல்மான் குர்ஷித்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியத் தூதர் தேவ்யானி கைது விவகாரத்தை இந்திய அரசு மிகவும் கடுமையாக எடுத்துக் கொண்டுள்ளது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இது மிகவும் சீரியஸானது. இதை இந்திய அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்தியத் துணைத் தூதர் தேவ்யானி கோப்ரகடே நடத்தப்பட்ட விதம் மிகவும் கண்டனத்துக்குரியது. அவமானகரமான செயல் இது. அமெரிக்க அதிகாரிகள் பொறுப்பின்றி நடந்து கொண்டுள்ளனர்.
இந்த விவகாரத்தை எப்படி அணுக முடியுமோ அந்த வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுத்துள்ளது என்றார் குர்ஷித்.












Click it and Unblock the Notifications