சக்ஸஸ்.. வானத்தில் பறந்த "டார்கெட்டை" துல்லியமாக தாக்கி.. இந்தியா திடீரென செய்த ஏவுகணை சோதனை.. ஏன்?
புவனேஷ்வர்: தரையில் இருந்து வானத்தை நோக்கி தாக்கும் ஏவுகணை ஒன்று இந்திய ராணுவம் மூலம் இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
Recommended Video
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் காரணமாக உலக அளவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் உலக நாடுகள் பல தங்களின் ராணுவ பலத்தை அவ்வப்போது சோதனை செய்து வருகிறது.
வடகொரியா புதிதாக ஏவுகணை சோதனைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்தான் இந்தியா சார்பாக புதிய ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியா சோதனை
இந்திய ராணுவம் மூலம் பூமியில் இருந்து வானத்தை நோக்கி தாக்கும் ஏவுகணை ஒடிசாவில் சோதனை செய்யப்பட்டது. இதை surface-to-air missile என்று கூறுவார்கள். அதாவது தரையில் இருந்து வானத்தை நோக்கி சென்று தாக்கும் ஏவுகணை ஆகும். ஒடிசாவில் பாலசோர் பகுதியில் இன்று காலை 10.30 மணி அளவில் இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஆனால் இது நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை அல்ல.

வெற்றி
மாறாக மீடியம் ரேஞ்ச் எனப்படும் நடுத்தர தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணை ஆகும். இது ஏவுகணை மிக துல்லியமாக இன்று இலக்கை தாக்கியது. மிக அதிக வேகத்தில் பறந்து சென்ற டார்கெட்டை துல்லியமாக தாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனை வெற்றிபெற்றதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணையை MRSAM என்று அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அர்த்தம் medium range surface-to-air missile என்பது ஆகும்.

சமீபத்தில் மிஸ் ஆனது
இந்தியா சமீபத்தில்தான் பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்தது. கடந்த புதன் கிழமையின் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இந்த பிரம்மோஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த ஏவுகணை நிலத்தின் ஒரு பரப்பில் இருந்து இன்னொரு பரப்பில் உள்ளதை தாக்கும் surface-to-surface ஏவுகணை ஆகும். அந்த சோதனையும் வெற்றிகரமாக செய்யப்பட்டது. முன்பு மீடியம் தூரம் சென்று தாக்க கூடிய பிரம்மோஸ் ஏவுகணையை இந்தியா சோதனை செய்த நிலையில் கடந்த புதன் கிழமை நீண்ட தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணையை சோதனை செய்தது.

சோதனை செய்தது
இந்த மாத தொடக்கத்தில்தான் இந்தியா இன்னொரு நீண்ட தூரம் செல்ல கூடிய பிரம்மோஸ் ஏவுகணையை சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்கு சொந்தமான சூப்பர் சோனிக் ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் கடந்த சில நாட்களுக்கு முன் சென்றது. பாகிஸ்தான் எல்லைக்குள் 124 கிலோ தூரம் வரை இந்த ஏவுகணை சென்றது. 40 ஆயிரம் அடி உயரத்தில் இந்த ஏவுகணை பறந்து, பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுள்ளது.

தவறுதலாக ஏவியது
பாகிஸ்தான் இந்த ஏவுகணையை டிராக் செய்ய முடியவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும், பராமரிப்பு பணியின் இந்த ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். இந்தியா இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை பிரம்மோஸ் ஏவுகணை ஆகும். இது ஆயுதம் பொருத்தப்பட்டது அல்ல. பயிற்சிக்காக தயார் நிலையில் இருந்த practice version பிரம்மோஸ் ஆகும். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா தனது ஏவுகணைகளை பாதுகாப்பு கருதி சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications