ம.பி.யில் மீண்டும் பாஜக ஆட்சி- காங்கிரஸுக்கு ஆறுதல் தொகுதிகள்- இந்தியா டுடே கருத்து கணிப்பு
போபால்: மத்திய பிரதேசத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று இந்தியா டுடே- ஓஆர்ஜி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் வாக்குப் பதிவுக்குப் பின்னர் இந்தியா டுடே- ஓஆர்ஜி இணைந்து வாக்காளர்களிடம் கருத்து கணிப்பை நடத்தியது.

இக்கருத்துக் கணிப்பில் ஆளும் பாரதிய ஜனதாவே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலைவிட கூடுதலாக 9 இடங்களைப் பெற்று ஆறுதலடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் மீண்டும் சிவ்ராஜ்சிங் சவுகானே முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார்.
2008ஆம் ஆண்டு தேர்தலைவிட பாஜக 5 இடங்கள் குறைந்து 138 தொகுதிகளைக் கைப்பற்றுமாம். காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலைவிட கூடுதலாக 9 இடங்களுடன் 80 தொகுதிகளைக் கைப்பற்றுமாம்.
அதாவது பாஜகவுக்கு 41% வாக்குகளும் காங்கிரஸ் கட்சிக்கு 36% வாக்குகளும் கிடைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications