மிசோரமில் காங்.க்கு பின்னடைவு- தொங்கு சட்ட சபைதானாம்: எக்ஸிட் போல்
டெல்லி: மிசோரம் மாநிலத்திலும் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும் அம்மாநிலத்தில் தொங்கு சட்டசபைதான் அமையும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் (எக்ஸிட் போல்) தெரிவிக்கின்றன.
டெல்லி, சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8-ந் தேதி எண்ணப்படுகின்றன.

விரைவில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிற இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி, ராஜஸ்தானில் பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுக்கிறது. காங்கிரஸ் ஆளும் மற்றொரு மாநிலமான டெல்லியில் தொங்கு சட்டசபை உருவாகும் என்று கூறப்படுகிறது.
பாரதிய ஜனதா ஆளும் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களை அக்கட்சி தக்கவைத்துக் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வசம் உள்ள மற்றொரு மாநிலமான மிசோரமிலும் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பிருப்பதாகவே எக்ஸிட் போல்-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டிவி- சிவோட்டர் இணைந்து நடத்திய எக்ஸிட் போல் விவரம்:
40 தொகுதிகளைக் கொண்ட மிசோரமில் ஆளும் காங்கிரஸுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 19 இடங்கள் மட்டும்தான் கிடைக்குமாம். மிசோரம் தேசிய முன்னணி 14 இடங்களைக் கைப்பற்றும் என்பதால் தொங்கு சட்டசபைக்கே வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் 32 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்ததால் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications