அஸ்ஸாமிலும் ஆட்சியை பறிகொடுக்கிறது காங்.; பாஜகவுக்கு ஏறுமுகம்: இந்தியா டிவி சர்வே
டெல்லி: அசாமில் தொங்கு சட்டசபை அமையும் எனக் கருத்துக்கணிப்பு ஒன்று கூறுகிறது. 126 சட்டசபை தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான அணி 57 இடங்களை கைப்பற்றும் என கூறியுள்ளது கருத்துக்கணிப்பு.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டசபைக்கு தேர்தல் தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்புள்ள நிலவரப்படி, புதுவை தவிர்த்து தமிழ்நாடு, கேரளா, அசாம் மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்களின் வெற்றி வாய்ப்பு குறித்து இந்தியா டி.வி.க்காக சி வோட்டர்ஸ் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது.
அந்த கருத்து கணிப்பில் அசாமில் தொங்கு சட்டசபை அமையும் எனக் கூறப்பட்டுள்ளது. 126 சட்டசபை தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான அணி 57 இடங்களை கைப்பற்றும் என கூறியுள்ளது கருத்துக்கணிப்பு.
ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்கள் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. கடந்த தேர்தலில் இக்கட்சி 78 சீட்டுகளை வென்றிருந்தது. பத்ருதின் அஜ்மலின் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக கூட்டணி 19 இடங்களில் வெற்றி பெறக்கூடும் என்றும், பிறர்-6 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
அசாம் கணபரிஷத், பாரதிய ஜனதாக கூட்டணி ஏற்படுவதற்கு முன் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதாக சி வோட்டர் கூறியுள்ளது. எனவே தற்போது அசாமில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு மேலும் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.












Click it and Unblock the Notifications