அமெரிக்கா-இந்தியா இணைந்து செயலாற்றினால் உலகம் பாதுகாப்பானதாக மாறும்- ஒபாமா தடாலடி பேட்டி!
டெல்லி: இந்தியாவும்-அமெரிக்காவும் இணைந்து பணியாற்றினால் உலகம் மேலும் பாதுகாப்பானதாக மாறும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக வரும் ஞாயிற்றுக்கிழமை டெல்லிவரும் ஒபாமா, முன்னதாக இந்தியாவின் ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில் ஒபாமா கூறியுள்ளது:

ஜனநாயக நாடுகள்
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்குமான நட்பு இயல்பாய் அமைந்தது. யாரும் முயற்சி எடுத்து இந்த நட்பை அமைக்க வேண்டிய தேவை கிடையாது. ஏனெனில், இரு நாடுகளுமே, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாகும்.

நூற்றாண்டின் சிறந்த நட்பு
21ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த நட்பு நாடுகள் என்றால் அது அமெரிக்காவும், இந்தியாவுமாகத்தான் இருக்க முடியும்.

இரண்டாவது முறை விசிட்
இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து பணியாற்றினால், இவ்விரு நாடுகளும், உலகமும் மேலும் பாதுகாப்பானதாகவும், வளர்ச்சிமிக்கதாகவும் மாறும். எனவேதான் எனது அதிபர் பதவி காலத்தில் தற்போது இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு வருகை தருகிறேன்.

நாடாளுமன்றத்தில் பேசினேன்
ஏற்கனவே 2010ல் இந்தியா வந்து நாடாளுமன்றத்தில் உரைநிகழ்த்தியபோது, உலக சவால்களை சந்திக்க, இந்தியாவும், அமெரிக்காவும் எப்படி இணைந்து பணியாற்ற முடியும் என்பதை விளக்கியிருந்தேன். இவ்வாறு ஒபாமா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications