கடுமையான விசா கெடுபிடிகள்...: அமெரிக்காவுக்கு இந்தியா எச்சரிக்கை
டெல்லி: இந்திய நிறுவனங்களுக்கான விசா விதிமுறைகளை கெடுபிடியாக்கினால் அதற்கான விளைவுகளை அமெரிக்கா சந்திக்க வேண்டியிருக்கும் என்று இந்தியா எச்சரித்துள்ளது.
அமெரிக்காவுக்கு பணியில் சேர வரும் திறன் தொழிலாளர்ளுக்கான எச்ஒன் பி விசாக்களைப் பெற விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது அமெரிக்கா. இது இந்தியர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
இந்தியாவைக் குறி வைத்தே இந்த நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது. அதாவது இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பணியாளர்களை குறைந்த சம்பளத்திற்கு, தங்களது நாட்டிலிருந்தே கொண்டு வந்து விடுவதாகவும், உள்ளூர் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதில்லை என்றும் பல அமெரிக்க நிறுவனங்கள் குற்றம் சாட்டின. இதன் விளைவாகவே தற்போது இந்த எச்ஒன் பி விசா விதிமுறைகளில் கை வைத்துள்ளது அமெரிக்கா.

இதுகுறித்து அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் கூறுகையில்:-
திறன் தொழிலாளர்களுக்கான சில தற்காலிக விசாக்களுக்கு கட்டுப்பாடு விதிக்க அமெரி்க்கா முயல்வது, அங்கு வேலைவாய்ப்புகள் மங்கத் தொடங்கி விட்டன என்றுதான் இந்தியா எடுத்துக் கொள்ளும்.
இது நிச்சயம் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதேசமயம், அமெரிக்க பொருளாதாரத்தையும் இது பாதிக்கும். இரு நாட்டு உறவுகளையும் இது பாதிக்கும் என்றும் நான் சொல்ல விரும்புகிறேன்.
நாளை அமெரிக்க நிறுவனங்கள் இங்கே வரும்போது, நானும் இதேபோல சொல்ல வேண்டி வரலாம். அவர்களது பிரச்சினையை இங்குள்ளவர்கள் காது கொடுத்துக் கேட்க முடியாத நிலை ஏற்படலாம். இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்' என்றார்..
மேலும் தேவ்யானி விவகாரத்துக்குப் பின்னர் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்திருப்பது மறைமுகமாக இந்தியாவைப் பழிவாங்கவோ என்ற சந்தேகமும் வலுத்துள்ளது" என இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications