ராஜஸ்தானில் விமானப்படை விமான விபத்து.. விமானப்படை வீரர் வீரமரணம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சல்மார் அருகே இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் விபத்துக்குள்ளான நிலையில் இந்திய விமானப் படை வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணம் செய்த விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரி அருகே உள்ள குன்னூரில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் இந்த விபத்து ஏற்படுத்திய நிலையில் மீண்டும் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஒரு போர் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சல்மார் அருகே உள்ள விமானப்படை தளத்தில் இருந்து விமானப்படைக்குச் சொந்தமான மிக்-21 ரக போர் விமானத்தில் விங் கமாண்டர் ஹர்சித் சின்ஹா பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
மாலை நேரத்தில் சாம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலைவன தேசிய பூங்கா பகுதியில் பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த பின் கமாண்டர் ஹர்ஷிகா உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ,இன்று மாலை விமான விபத்தில் பின் கமாண்டர் சிதைவடைந்த சோகமான தகவலை இந்திய விமானப்படை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாகவும் துணிச்சலான அவரது மறைவை அடுத்து அவரை இழந்து வாடும் குடும்பத்துடன் இந்திய விமானப்படை உறுதியாக நிற்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications