ஐக்கிய அரபு அமீரகத்தில் Desert Flag-10: இந்தியாவின் மிக்-29, ஜாகுவார் போர் விமானங்கள் பங்கேற்பு!
டெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டெஸர்ட் ஃபிளாக்- 10 என்ற பன்னாட்டுப் பயிற்சியில் இந்திய விமானப்படை வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தப் பயிற்சியில் மிக்-29, ஜாகுவார் ஆகிய விமானங்களை இந்திய விமானப்படை களமிறக்குகிறது.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில, முதன்மையான பன்னாட்டு விமான போர் பயிற்சியான டெஸர்ட் ஃபிளாக்-10 என்ற போர் பயிற்சியில் பங்கேற்க இந்திய விமானப்படையின் ஒரு பிரிவு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தஃப்ரா விமான தளத்தைச் சென்றடைந்தது. இந்தப் பயிற்சியில் மிக்-29, ஜாகுவார் ஆகிய விமானங்களை இந்திய விமானப்படை களமிறக்குகிறது.

டெஸர்ட் ஃபிளாக் பயிற்சி என்பது ஐக்கிய அரபு அமீரக விமானப்படையால் நடத்தப்படும் ஒரு பன்னாட்டுப் பயிற்சியாகும். இதில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, பஹ்ரைன், பிரான்ஸ், ஜெர்மனி, கத்தார், சவுதி அரேபியா, கொரிய குடியரசு, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் விமானப்படைகள் இந்திய விமானப்படையுடன் பங்கேற்கின்றன. இந்த பயிற்சி 2025 ஏப்ரல் 21 முதல் மே 08 வரை நடைபெறவுள்ளது.
உலகின் மிகவும் திறமையான விமானப் படைகளுடன் செயல்பாட்டு அறிவு, சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் சிக்கலான, மாறுபட்ட போர் செயல்பாடுகளை மேற்கொள்வதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும். இத்தகைய பயிற்சிகளில் பங்கேற்பது பரஸ்பர புரிதலை மேம்படுத்துகிறது. மேலும் பங்கேற்கும் நாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்துகிறது.
இந்திய விமானப்படையின் பங்கேற்பு பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள நட்பு நாடுகளுடன் பாதுகாப்பு உறவுகளையும் செயல்பாட்டுத் தன்மையையும் வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே முப்படைகளின் எதிர்கால போர்ப்பயிற்சியின் இரண்டாவது பதிப்பு, டெல்லியி உள்ள மானெக்ஷா மையத்தில் 2025, ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெறும். தலைமையக ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின் கீழ் நடத்தப்படும் இந்தப் பாடமுறை முப்படையினர், சிந்தனையாளர்கள், போர்ப் பயிற்சி மையம் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது; பயிற்சியில் பங்கேற்பவர்களாக மேஜர் ஜெனரல்கள் முதல் மேஜர்கள் வரையும் பிற சேவைகளைச் சேர்ந்த அவர்களுக்கு இணையான அதிகாரிகளும், டிஆர்டிஓ உட்பட பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பிற துறைகளின் பிரதிநிதிகளும், ஸ்டார்ட்-அப்கள், எம்எஸ்எம்இக்கள் மற்றும் தனியார் தொழில்துறையை உள்ளடக்கிய பாதுகாப்புத் துறையினரும் இருப்பார்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
-
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications