370 சட்டப்பிரிவு ரத்து.. விளைவுகளை சந்திக்க... தயார் நிலையில் இந்திய ராணுவம், விமானப் படை!
Recommended Video
ஸ்ரீநகர்: 370ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து இந்திய ராணுவமும் இந்திய விமானப் படையும் தயார் நிலையில் இருக்கிறது.
ஜம்மு- காஷ்மீருக்கு கடந்த 1949-இல் நேரு அமைச்சரவையில் 370 சட்டப்பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இதனால் நாடாளுமன்றத்தில் எடுக்கும் எந்த முடிவுகளும் ஜம்மு- காஷ்மீருக்கு பொருந்தாது.

கடந்த சில தினங்களாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருப்பதாக வந்த ரகசியத் தகவலை அடுத்து பள்ளத்தாக்கு பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370- நீக்கப்பட்டது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதற்கு காஷ்மீர் மாநில அரசியல்வாதிகள் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இந்திய எல்லையில் ராணுவத்தினரும் விமான படையும் தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications