கொரோனா தடுப்பூசி.. ஒரு லட்சம் டோஸ்களை.. நேபாள ராணுவத்திற்கு இலவசமாக வழங்கிய இந்தியா
காத்மாண்டு: இந்தியா ராணுவம் சுமார் ஒரு லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நேபாள ராணுவத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரிட்டன், பிரேசில் போன்ற நாடுகளில் பரவும் உருமாறிய கொரோனா வகைகளே வைரஸ் பாதிப்பு அதிகரித்ததற்கு முக்கிய முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தடுப்பூசி மட்டுமே ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இதனால் பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், இந்தியா ராணுவம் சுமார் ஒரு லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நேபாள ராணுவத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசிகள் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் நேபாள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ்.. விலங்கில் இருந்தே மனிதர்களுக்கு பரவியது.. ஹு - சீனா கூட்டு ஆய்வில் தகவல்.. திருப்பம்!
ஏற்கனவே, அண்டை நாடு என்ற முறையில் நேபாளத்திற்கு 10 லட்சம் தடுப்பூசிகளை இந்தியா வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல சீனாவும் தனது தடுப்பூசியின் எட்டு லட்சம் டோஸ்களை நேபாளத்திற்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தில் கடந்த மாதம் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டது. அங்கு தற்போது வரை 2.76 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல சுமார் 3,207 பேர் சிகிச்சை பலனிற்றி கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்,