For Daily Alerts
Just In
இந்திய ராணுவம் போருக்கு ரெடியாக இருக்க வேண்டும்.. ராணுவ தலைமை தளபதி பேச்சு
டெல்லி: டெல்லியில் ராணுவம் தொடர்பான இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. இதில் ராணுவ தளபதி பிபின் ராவத் பங்கேற்றார்.
பிபின் ராவத் பேசியதாவது: இந்தியா தொடர்ந்து பல்வேறு போர் நடவடிக்கைகளை எதிர்க்கொண்டு வருகிறது. எனவே, இந்திய ராணுவம் எந்த சவாலையும் எதிர்க்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.
நமது எல்லைகளில் போரை சந்திக்கவும் கூட நாம் எப்போதும் தயாராக இருப்பது அவசியம். ஆயுத படைகளுக்கு எந்த மாதிரியான தொழில்நுட்பங்கள் தேவை என்பது குறித்து உடனடியாக அடையாளம் காணப்படவேண்டும்.
நவீன தொழில்நுட்பங்களை காலதாமதமின்றி ராணுவம் ஏற்க வேண்டும். ஆயுதக் கொள்முதல் என்பது சோதனை முயற்சி மட்டுமே. தொடர்ந்து ஆயுதங்களை கொள்முதல் மட்டுமே செய்து கொண்டிருந்தால் அது இந்திய ராணுவத்திற்கு பயன் தராது என்றார்.
Comments
English summary
Army Chief General Bipin Rawat today strongly pitched for fast-tracking procurement of defence systems to enhance India's military capability and said armed forces must remain ready for warfare along the borders.
Story first published: Friday, March 24, 2017, 8:38 [IST]