எவரெஸ்டை சுத்தப்படுத்தும் இந்திய ராணுவ குழுவிற்கு ஒரு “ராயல் சல்யூட்”
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட்டை சுத்தப்படுத்தும் பணியில் இந்திய ராணுவ வீரர்கள் குழு ஈடுபட்டுள்ளது.
34 பேர் கொண்ட இந்த குழு, எவரெஸ்ட் சிகரத்தை சுற்றி குவிந்து கிடக்கும் ஆபத்தான பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் அசாதாரண வேலையில் இறங்கி உள்ளனர்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், கேப்டன் எம்.எஸ்.கோலி தலைமையில் சாகர்மாதா என்ற எவரெஸ்ட் சிகரத்தின் ஒரு பகுதிக்கு சென்ற இந்திய ராணுவ குழு, முதன் முதலாக அச்சிகரத்தை சுத்தப்படுத்தும் பணியை செய்து முடித்தது.
இதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் இப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. ஐம்பதாவது பொன்விழாவை கொண்டாடும் வகையில் தற்போது, இந்திய ராணுவ குழு எவரெஸ்ட் சென்றுள்ளது.
எவரெஸ்ட்டை சுற்றி குவிந்துள்ள 4000 கிலோ கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பது இந்த ஆண்டிற்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications